கிரேசி மோகன்
’’கண்ணனை நெஞ்சே கருது”….
—————————————————–

Mvc-008f (1)
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–

 

சீதக் களபமும் ஸ்ரீவத்ஸ மச்சமும்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

போதமர் மங்கையும் பூந்துழாயும் – வாதிடும்
வண்ணம் இடமின்றி வாய்த்தமணி மார்பனை
கண்ணனை நெஞ்சே கருது!

மூவடி மண்கேட்ட சேவடி பொற்சிலம்பு
மாவலி உச்சி மவுலியில் – தீவெடிக்க
திண்ணெனத் தாக்க திருவடி சாத்திய
கண்ணனை நெஞ்சே கருது!

மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
பத்திலோர் பாகவதப் பிள்ளையை – ஒத்தனாய்
மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
கண்ணனை நெஞ்சே கருது!

தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் – நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது!

திண்தடக்கை நீட்டி தலைகிடத்தி ஆயிரங்
கண்படுக்கை தன்னில் களைப்பாறும் – தென்னிலங்கை
அண்ணனைந்(து) ஈறெடுத்து,தம்பியாள தந்தராம
கண்ணனை நெஞ்சே கருது!!

——————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி :

http://photos1.blogger.com/img/141/4502/1024/Mvc-008f.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "திருமால் திருப்புகழ் (64)"

  1. /*தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
    வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய்*/   
    Natchentru varikal – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.