கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
——————————————————-

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

 

’’கண்ணனை நெஞ்சே கருது’’
———————————————————

பூமங்கை நாயகனை, பாமங்கை ஆண்டாள்மேல்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

காமங்கொள் காதலனைக், கள்வனை – ஜாமங்கொள்
வண்ணனை ஆயிரம் வாரணமாய் வந்தவனை
கண்ணனை நெஞ்சே கருது!

வாதாடி வம்படித்து வாழ்ந்ததெலாம் வையமெனும்
தீதாடி பிம்பத் திருக்கன்றோ – சூதாடி
தன்னனைத்தும் தோற்ற தருமர்க்(கு) உதவிய
கண்ணனை நெஞ்சே கருது!

ஆழியை பூமியை நாழிகை நேரத்தில்
ஊழியில் உண்டுமிழ்ந்த உத்தமனை – தாழியுள்
வெண்ணையை தான்வளர்ந்த மண்ணையும் உண்ணவரும்
கண்ணனை நெஞ்சே கருது!

விடையடக்கி பின்னை இடைபிடித்து கீதை
விடையளித்தான் வாழும் வகைக்கு – விடைகொடுக்க
எண்ணிலா ஆசைக்கும் ஏங்கும் நினைப்புக்கும்
கண்ணனை நெஞ்சே கருது!

உண்ணும் சுவையும், உணவைச் செரித்திடும்
வண்ணம் வயிறும், விழிசொருக – திண்ணையில்
எண்ணமற சாய்ந்திடும் ஏகாந்தம் வேண்டி
கண்ணனை நெஞ்சே கருது!!

————————————————————————————————————–

படங்களுக்கு நன்றி :

http://kamadenu.blogspot.in/2008_07_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.