பத்மநாபபுரம் அரவிந்தன் –

pagarba

ஒப்பிடல் என்பதே
மனச் சிதையின் குறியீடு
அவன் போல் இவனில்லை
இவன் போல் அவனில்லை
எவன் போலும் நானில்லை
இந்நிலை முற்றிய
மறுகலின் வெளிப்பாடாய்
குழந்தைகள் மேல் கவியும்
அவன் போல் நீயில்லை என நீ
குழந்தைகளைச் சாடுகையில்
அவற்றின் அடிமனம் சொல்லும்
எவன் போலும் நீயில்லை
எனும் உண்மையை…
ஒருநாள் நீ
உன் போல் நீயின்றி மாறி
எல்லோர் போலும் போய் சேர்வாய்…

 

படத்திற்கு நன்றி :

http://arefactsoursolid.wordpress.com/2014/03/03/10-hilarious-things-kids-say/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *