-கவிஞர் காவிரிமைந்தன்

திரைப்பாடல்களில் உள்ள வரிகளைச் சிலர் மனனம் செய்துவிடுகிறார்கள்.  ஏன் தெரியுமா?  உண்மையை உயிரோட்டமான வரிகளாய்க் கவிஞர்கள் புனைந்திடுவதால்!  அவை காந்த சக்தியைப் போல் இதயம் கவர்ந்துவிடுகின்றன!  அதுவும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் திரையில் அப்பாத்திரத்தை ஏற்று உச்சரித்து நடிக்கும்போது, உயிர்க்காவியமாய் அப்பாடல் நிலைபெற்று விடுகிறது. அட.. அப்படிப்பட்ட பாடல் எது என்று கேட்கிறீர்களா?

கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களது கற்பனையில் பிறந்த வரிகளைத் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்தரராஜன் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால், முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு பாடல்காட்சியில் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்தபடி, ஓர் ஆர்மோனியப் பெட்டியுடன் பாடுகின்ற அபூர்வமான பாடலாகும்!!

தொழிலாளி என்னும் திரைப்படத்தில், தொழிலாளி என்னும் உயரிய பதத்திற்குப் பல்வேறு பெருமைகளை சேர்த்த பாடல் வரிகளிவை!

ஒவ்வொரு திரைப்படத்திலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாகத் தோன்றி நடித்த கதாநாயகனுக்கு இப்பாடல் அந்த ஏற்றத்தை ஏட்டளவில் எழுதிவிட முடியாது.  கவிஞர் ஆலங்குடி சோமு தந்த அட்சய பாத்திர வரிகளிவை.  அகிலம் உள்ள நாள் வரைக்கும் உலகில் உழைப்பாளர்கள் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும் வரிகளிவை!

பாடல் :ஆலங்குடிசோமு
பாடியவர் :
டி.எம்.சௌந்தராஜன்
இசை :
கே.வி.மகாதேவன்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி                                                      m.g.r. - ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒருதொழிலாளி
அன்னை உலகின் மடியின்மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒருதொழிலாளி
அன்னை உலகின் மடியின்மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன்கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின்மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒருநாள் திரும்பும்
கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒருநாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒருநாள் மலரும்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்தவரிசையில் முதல்வன் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின்மேலே
அனைவரும் எனது கூட்டாளி

http://www.youtube.com/watch?v=AuWMezsKKxU&feature=player_detailpage

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *