திருமால் திருப்புகழ் (90)
கிரேசி மோகன்
- Kaliyamardhana. Acrylic on canvas. #Krishnafortoday
Keshav
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
’’கண்ணன் அந்தாதி’’
————————————

காத்துபுகா கர்ப்பத்தில், காத்துக் கிடந்தன்று,
காத்தாய் பரீட்சித்தைக் கார்முகிலே, -பூத்துப்,
புலனைந்தால், வாடிப் பிறந்திறக்கா வண்ணம்,
தலையெழுத்தில், போடுகையெ ழுத்து….(56)
எழுத்தறி வித்தாய், எழுதவைத்திப் பூனை,
கழுத்தினில் பக்திமணி கட்டி, -வழுத்திடும்,
ஆஸ்தானப் பாடகனாய், ஆக்கா(து) எனையேற்பாய்,
சாஸ்தாவாய், எண்ணிச் சுமந்து….(57)
சுமந்தஅன்னை விட்டு, சுமந்துன்னைத் தந்தை,
அமைந்தஅன்னை ஆய்ச்சிக்(கு) அளிக்க, -உவந்துநீ,
அவ்வாழ்வை ஏற்றாய், அவதாரம் என்றறிந்(து),
இவ்வாழ்வை ஏற்பாயோ இன்று….(58)
இன்றுபோய் நாளைவா, என்றிலங்கை வேந்தனிடம்,
அன்றுரைத்த அன்பே, அரிமயமே, -இன்றாகி,
நேற்றான நாளையே, நேரான வட்டமே,
கூற்றான காவலா காப்பு….(59)
காப்பாய் கருவுக்கு, நீர்ப்பையாய் தேரைதனக்(கு),
ஆப்பொழிந்த ஆன்மாக்(கு) அரவணைப்பாய், -பூப்பாயே,
யாப்பாய் எனக்குள்ளே, நூற்பாய் கவிதைகளை,
தோப்பாய் இருப்பேன், தனித்து….(60)
——————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

