கிரேசி மோகன்

Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday Keshav
Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday
Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)…. ————————————————————– ’’கண்ணன் அந்தாதி’’ ———————————–

Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday Keshav
Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday
Keshav

அலர்ந்திடும் செந்தா மரையாளுன், மார்பில், கிளர்ந்திடும் சந்தனச் சேற்றில், -விளைந்திட, பாற்கடல் மத்தியில், பாம்பணை மெத்தையில் ஊர்கலி தீர்த்துக்கொள், ஓய்வு….(71) ஓய்!உமக்கு, ஓய்வெடுக்கப் பாய்விரிப்பான்; ஆதிசேடன் சாய்ந்திட, சிம்மா சனமாவான்; -வேய்ந்த, குடையாவான் நின்றிட; காலணியாய்ப் போய்வர; கடனாயுன் வாழ்வைக் கொடு….(72) கொடுப்பதில் கர்ணன், எடுப்பதில் கள்ளன் அடித்துத் திருத்தலில், அன்னை, -மிடுக்குடன், ஆசை தொலைத்தவன், ஆட்டத் துணையாக, வேஷம் கலைத்திடும் விஷ்ணு….(73) விஷ்ணுவின் நாமங்கள், வேண்டும் பலனளிக்கும், உஷ்ண வினையை உருக்கிடும், -கஷ்டதசை, துஷ்டன், நமைக்கண்டு தூர ஒதுங்கிடும், நிஷ்டைக்(கு) இழுத்திடும் நூல்….(74) நூலறியேன், மண்ணளந்த தாளறியேன், மல்லாண்ட தோளறியேன், ஞானவிளக் காளறியேன், -மாலரியே, தேசிகனாய் வந்தெனக்(கு), ஆசை அடங்கவைத்து, ஊசிவாயில், ஒட்டகத்தை ஓட்டு….(75)….கிரேசி மோகன்…. ———————————————————————————————————————- படங்களுக்கு நன்றி: http://kamadenu.blogspot.in/2014_02_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *