திருமால் திருப்புகழ் (101)
கிரேசி மோகன்

the Vamana avatar. Brahma washes his feet, the water of which flows down as the Ganga. Keshav
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————

நீல யமுனையில், நீந்திய கோபியர்,
சேலைப் புதையலை சேகரித்தோய், -நாளை,
சபையில் துரோபதை, சோகம் களைந்து,
அபயம் அளிக்கத்தா னே….(113)
நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்,
சீர்மல்கும் சீதரனை, சிந்திக்க ஜீவன்கண்,
ணீ ர்மல்க ஆன்மாவா கும்….(114)
நிவேதனம்
————–
திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
பருப்பு,தயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து,
அண்டாவில் சாறு, அதிரசம், சீடை,முறுக்கு,
உண்டேனுன் நாமம் உரைத்து….(115)
ஒருவர் படுக்க, இருவர் அமர,
வருகை புரிந்தவரால் நிற்க, -ஒருயிரவில்,
பொய்கைபேய், பூதத்தார் பின்னிப் பிணைந்திடச்,
செய்த மழையோன் சரண்….(116)
பாங்கி முதற்கொண்டு, பாமாக்கள், ருக்மணிகள்,
தாங்கிய திண்தோள் மணிவண்ணா, -சாங்கிய,
யோகமகள் பாதாதி, கேசமதை நீயுரைக்க,
வாகனமாம் புள்ளேறி வா….(117)
பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
எங்கும் திகழ்வோனை ஏத்து….(118)….கிரேசி மோகன்….
———————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_01_01_archive.html