கிரேசி மோகன்

Bhagavatha - Raasa Leela Keshav
Bhagavatha – Raasa Leela Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
”கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————–

Ulukala bandhanam. Oil on canvas.
Ulukala bandhanam. Oil on canvas.

ஆலிங் கனித்தராதை, தோளிங்க நர்த்தனத்தால்,

காளிங்கக் காட்சி கவனமுற, – மாலிங்கு,
மாதை தலைசுமந்து காதல்கூத் தாடுகிறான்
கீதை வரிகள் மறந்து….(124)

ஆத்திலொரு காலாக, சேத்திலொரு காலாக,
காத்திருக்கேன் கேள்விக் குறியாக, -பூத்திருவை,
மார்பினில் சூடிய, மாதவா நேருக்கு,
நேர்பதில் கூறுவதென் நாள்….(125)

ஆழியில் தூங்கியொரு, நாழி முழித்துலகை,
ஊழியி லுண்டு களைத்தவா, -வாழிநீ,
உன்னை நினைந்து, ருகியுறங்கு மென்னைநீ,
உன்கனவில் காண உறங்கு….(126)

அடிசறுக்கி ஆனை, துடிதுடித்த போது,
நொடிக்கணக்கில் வந்தகால நேமி, -வடிவெடுத்து
ஆவென வாய்பிளந்த, பாவத்தின் பற்களுற்றேன்,
ஆவன செய்யவா தேவு….(127)

அறியாமை கொண்டேன், அகங்கார முற்றேன்,
அரிஆமை தோற்றம் எடுத்தோய், -சரியான
ஆளிதற்கு நீதான் அலைமனம் ஆழ்கடல்
போலிருக்கு, யோகம் புகட்டு….(128)

அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்,
கம்மென நிற்பதன் தாத்பர்யம், -நம்மனம்,
புத்தியை, மாற்றிடும் யுக்தியாம் கீதையை,
ஒத்திகை பார்ப்பதற்க் கோ….(129)

———————————————————————————

படங்களுக்கு நன்றி: http://kamadenu.blogspot.in/2013_07_01_archive.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.