திருமால் திருப்புகழ் (110)
கிரேசி மோகன்

SrimadBhagavatham – Kasturi Tilakam. – Keshav
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

சரமழை பெய்திடும், சாரங்க பாணி,
நரனாகி கோதண்ட நாணால், -கரதூஷ னாதி
யரைத்தீர்த்த, நாரா யணஜோதி,
ஆதி அனாதியேநா தி….(168)
சிந்தையில் சிக்காத, சச்சிதா னந்தமே,
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய்….(169)
சிசுபால கம்சர்கள், சீரழிய அன்று,
வசுதேவ வம்ச திலகா, -பசுக்களை,
மேய்த்த பகவானே, பக்தர்க்(கு) அருள்புரிய,
வாய்த்த வரதனே வா….(170)
சோதரர்க்குள் பேதமற, தூதுசென்ற யாதவனை,
சோதனையால் வேதனைநம் மீதணையும், -போதினிலே,
கீதையை மூதுரைத்த, மாமதுரை மாதவனை,
ஆதிமது சூதனென்று ஓது….(171)
சுதாமன் அவலுக்கு, சொத்தை அளித்த,
கதாதரன் கண்ணன் பரம, -பிதாவாம்,
அலர்மேல் அன்னை, மணாளன் அருளால்,
மலரும்நாள் காசின் பிறப்பு….(172)
சுகந்த துளசி, சிலிர்க்க வலிமை,
மிகுந்த இருதோளில் பூணும், –முகுந்தன்,
நிதர்ஸனம் என்று, நடப்போர் வழியை,
சுதர்ஸனம் காக்கும் சுழன்று….(173)
————————————————————————————————————-
