–மஸ்கட். மு. பஷீர்.

என் பார்வையில் கண்ணதாசன்

Kannadasanகவிஞன் என்பவன், தன்படைப்புக்கள் பேரறிவாளர் விருதுகள் பலபெற்று பெட்டகத்துள் அடைபட்டு, சட்டத்துக்குள்  வரம் பெற்று அலங்காரம் பெறுவதில் அல்ல வெற்றிபெறுகிறான். பட்டமும், பத்திரமும், பதக்கமும், பணமுடிப்பும், பளிங்கு விளக்குகள் மேடையில் பெறும் பரிசளிப்பும் என்றெல்லாம்  ஒரு குறுகிய வட்டத்துள் அடைபடும் கவிஞனாக என் பார்வையில் கவியரசர் கண்ணதாசனைக் காண முடியவில்லை. அந்தக் கவிவெளிச்சத்தை  சட்டங்களுக்குள்ளோ, குறுகிய கவிவட்டதுக்குள்ளோ  கட்டிப்பபோட என்னால் முடியவில்லை.

மாறாக மக்கள் இதயக் கூட்டில் மட்டும் அடையும் பறவையாய் , தினம் தினம் மனிதனின் வாழ்வில் சிறகடிக்கும் பிரச்சனைகளின்  தீர்வாய், உறவுகளின் புனிதத்தைப்  பூஜிக்கும் மலர்களாய், சங்கடங்கள் தீர்க்கும் மருந்தாய், தனிமையில் சிந்தித்தால் கிடைக்கும் ஞான ஓளியாய், இதயத்தில் இயங்கும் ஜீவ நாதமாய், உலகத்தரக் கவிஞர்களின் தடாகத்தில் அவர் ஒரு ஜீவ நதியாய் அவரின் கவிதைகளையும்  பாடல்களையும் மக்கள் வைத்துப் போற்றுகின்றனர். அந்த வரிசையில் கவியரசர் கண்ணதாசன் முதல்வராகிறார். அங்கேதான் கவியரசர் ஒரு முழுமை பெற்றக்  கவிஞராக வித்தியாசமாய் ஜொலிக்கிறார்.

‘இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே’ என வாழும் கவிஞர்கள் மத்தியில் தரத்தில் குறையாத தரமான படைப்புக்களைள தமிழ் சமூகத்துக்கு தந்தவர் கவியரசர். அவரின் வரிகள் காற்றோடு கலந்து தமிழ் மூச்சின் சுவாசமாய் கலந்தது. அந்தக் காற்றை  சுவாசித்து வாழ்ந்ததால்தான் என்போன்றவர்களின் தமிழறிவும் இலக்கிய அறிவும் சிறிதேனும் வளர்ந்தது என்றால் மிகையாகாது.

கண்ணதாசன் என்ற அந்த கவிச்சோலைக்குள்  அத்துணை அமுதமும் தேனாய், தெவிட்டும் மதுவாய் தேங்கி வழிந்தாலும், கவியரசு என்னும் கவிஞர் கம்பனின் கவிரசம் பருகி மயங்கி கவின்மிகுக் கவிதைகள் வடித்தார் என்றால் மிகையாகாது! அவரைப் பற்றி என் கவிதைத்  தொகுப்பில் இவ்வாறு எழுதியுள்ளேன்;

தமிழ்ச் சிப்பியில்
பிறந்த முத்தையா
நீ கவிக்கடலின்
மொத்த  சொத்தையா !
கம்பன் வரி
நேசித்தாய் !
கண்ணன் வரி
வாசித்தாய் !
தமிழ்க் காவியமாய்
பிறந்து நீ சாதித்தாய் !
பாரே போற்றிய
கம்பனின் கவி நயத்தை
பாமரன் உதடுகளில்
பனிக்க வைத்தவன் !

தமிழ்ப்பாலை  என்போன்ற மழலைக்கு அமுதூட்டிய கவித்தாய் கண்ணதாசன். மற்ற கவிஞர்களெல்லாம் நகைபோட்டு, அணிபோட்டு, வகை வகை  அழகுப்பூசி தமிழன்னையை அழகுபார்த்த வேளையில் முத்தான தமிழால் தமிழ்த்தாயின் முகத்தில் பொட்டு வைத்து அழகின் உச்சம் சேர்த்தவன்.

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே வளர்
பொதிகை மலைதோன்றி
மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

சந்த நடையும், தன் சொந்த நடையும் இணைத்து இசைத்து  கவிதை நடனம்  ஆடிய கவிச்சிவன். அது ஆனந்தக் கூத்தேதவிர ஆக்ரோஷ ஆட்டம் இல்லை.

சந்தத்தில் பலக் கவிபாடி தமிழ்ச் சொந்தத்தை  மீளாமல் அடிமையாக்கியவன். அதனைப் படித்துப் பாடிய பலரும் பின்னாளில் நிரந்தர அடிமைகளாய் மாறிய விந்தையை  என்பனபவன்று சொல்வது.

“வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் – நான் தேதய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணலே ஜாடை பெண்ணிலா… ”

‘எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா’ என்று தொடங்கும் பாடலில்,
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேதன்
காலூரில் நடந்து வந்தேதன் காளையூர் வந்துவிட்டேன்!
வேலூரைப்  பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!’

‘ஊர், ஊர்’ எனத் தொடரும்  வார்த்தைகளால் அலங்கரித்து, இலக்கியத் தேர்பிடித்து தமிழ்த்தேரோட்டம் நடத்தியவர்  கவிஞர். இந்தப் பாடலை  என் பள்ளிப் பருவத்தில் கேட்டு ‘இப்படியும் பாடல்  எழுதும் ஒரு மகாக்கவிஞன் தமிழ்மண்ணில் உள்ளாரா?’ என ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்… அதிசயித்து வியந்திருக்கிறேன். இன்றளவும் என் நெஞ்சூரில் வைத்து  நித்தமும் அலங்கரிக்கிறேன்.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழ்ப்பண்பாட்டை உரக்கப்பாடியவர் கவியரசர். கம்பனின் காப்பிய வரிகளிபல அடியோட்டமாகச் சொல்லப்படும் கருத்தும் இதுவேயாகும். சுந்தரகாண்டத்திலே, தன் கணவன் ராமனுக்கு அனுமனிடம் செய்திபசால்லி அனுப்புகிறாள் சீதை,

‘வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை  திருச்செசவி சாற்றுவாய்’

எனச் சொல்கிறாள். அதையே  கண்ணதாசனும் இராமனைப்ப் பற்றிப் பாடும்வேளையில் ஒருதாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் இராமன் என்பார்.

‘மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன.. மணி மாளிகைதான் கண்ணே’ என்ற திரைப்படப் பாடலில்  அதை  மீண்டும் வலியுறுத்துவார் கவிஞர்.

“உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன் ..”.

“ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன ? –காதல்..”
எனும் பாடலில்  ‘நினைத்ததும் வருவது காதல்’ என்பதை  அவர் சொல்லவில்லை. அதே நேரம் ஒருவனை மனதார இவன்தான் தன்னுடைய காதலன் என நினைத்து முடிவு செய்துவிட்டால்  பிறப்பதுதான் காதல் எனச் சொல்கிறார்.

இருமனங்கள் இணைந்து  ஒருமனமாகிவிடும் அந்த வசந்த வேளையிலே, ஒருவேளை  பிரிவு எனும் துயரம் வந்துவிடுமானால் அந்த இழப்பைத்  தாங்கிக் கொள்ள  எத்தனைக்  கடினமான இதயம் வேண்டும்  என்பதை வார்த்தைகளால்  வருணிக்க முடியாது. இதயத்தின் கடினத்தைத்  தாங்காது கண்ணீர் சொரியும் சோகத்தின் வடிவத்தை நாம் சங்க இலக்கியத்தில் நிரம்பவே காணலாம்.
அதில் ஒரு பாடலில்  ( அகநானூறு 233: பாலை).

“அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநி ..” எனத் தொடங்கும் பாடலில் பிரிவின் துயரால் அழுகிறத் தலைவியின் கண்ணீரை  ஆற்றுமுகமாகத் தோழி சொல்லும் ஆறுதலில் கற்பனையின் செறிவு காணக்கிடைக்கிறது.

அப்படிப் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர்ந்துவிடும் போது கிடைக்கும் சுகத்திற்கு அளவேது…!
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் திருந்திழாய்
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத
கானம் கடந்து  சென்றார்

பிரிந்தவர் மேனிபோல மழையின்றி வறண்டு கிடந்த முல்லைப் பூவானது, பெய்த மழையால் பொருந்தியனர் மேனி போலச் செழித்தது என்பதை இச்சங்கப் பாடல் விளக்குகிறது. பிரிந்தவர் சேரும் தருணம் பொதுவாக ஆர்ப்பரிக்கும் தருணமாகத்தான் இருக்கும். ஆனால் கவியரசரோ அதைக் காதலியின் அமைதியின் தருணமாக,  மௌனத்தின் நிலையாக வரைகிறார்.

“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? – மௌனம்”

ஆதலால்தான் காதலியின் நிலையைப் பற்றி சொல்கிறார் கவியரசர்… மௌன நிலை என்று !

பிரிந்து மீண்டும் சேரும் காதலர்கள் பேச்சுவரமுடியாமல் கண்களால் மட்டுமே கவிதை  பாடிடுவர். பேச்சுகூடஅங்கு ஒரு சுமையாகத்தான் இருக்கும். கம்பன் இந்த நிலையை  நயமாகப் பாடியுள்ளார். ஆனால் கண்ணதாசனோ அந்த நிலையை  மௌனத்தின் நிலையாக, அமைதியான தெய்வத்தின் சன்னதி என்பதாகப் பாடுகிறார். காதலின் தெய்விகத்தைத் தன் காவிய வரிகளால் ஆளுகிறார்;

“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்
அழுதால் கொஞ்சம்  நிம்மதி.
பேச மறந்து  சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி…”

“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்ற இந்தப் பாடல் எதிர்மறைக் கருத்துக்கள் தாங்கி நிற்கும் பாடல்போல்  தோன்றினாலும், நேர்மறை  எண்ணமிக்கப் பாடலாக  கவிஞர்.கண்ணதாசனால் ஓவியமாய் வரையப்பட்ட பாடல். மனிதனின் வாழ்வில் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் மனம் தானே. மனத்தால் தான் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது.

இன்பத்தில் எழுந்து விளயாடும் மனம்
துன்பம் வரும்பபோது மட்டும் ஏனோ
துவண்டு போகிறது !

சோகத்தில் மனம் தளர்ந்து விடும்போது அது விடை தேடி இறைவனை நாடுகிறது! புரியாத புதிருக்கு ஆறுதலாய் விடைதேடி இறைவனை  நாடுவதாக அற்புதமமான வரிகளைக் கொண்ட  கருத்தாழமிக்க வரிகள்.

‘கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா’குளிர்நிலா என எல்லாக் கவிஞர்களும், நிலாவின் வெளிச்சத்தில் குளிர்ந்தபோது கொதிக்கும் நிலாவெனக் கண்ணாதாசன் பாடி வெப்பக்காதலை வெவளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

யாப்பின் அச்சில் நின்று கொண்டே அவர் நெய்த பலவிதமான கவிதைப் பாக்கள் நவனீ க் கவிதை வடிவத்துக்கு சுக்கான் பிடித்தது. அது தமிழ்த்தாய்க்கு ஆடைபூட்டி, அடையாளம் காட்டி, மானம் காத்த நெசவாளியாக நமது கவிஞரை கவியுலகில் அடையாளம் காட்டியது.

“பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்…”

‘மலைத்தேன்’ எனும் சிலேடை வரிகண்டு நானும் மலைத்தேன்…கவிஞரின் கற்பனைத் திறனின் தமிழாழம் கண்டு திகைத்தேன்!.

அதிலும், ‘பார்வையால் குடித்தேன்..’ என்ற பட்டொளி வீசும்  வரிகண்டு இன்றளவும் வியந்தேன்… கவியரசரின் கவியாளுமை கண்டு தோற்று நான் அயர்ந்தேன் !

கன்னியரைத் தொடாமல்  கவிதை என்பதை  எப்போது பாடிமுடிப்பது… நான் கன்னியர் பற்றி அவர் பாடல் வடிப்பதைச் சொல்கிறேன். அலையும் தோதாரணமாய் கவிஞரின் வரிகளில் அழகுப் பதுமைமயர் ஆடி நிற்பதைக் கண்டு, இன்றும் நான் நினைனத்து ரசித்து ரசித்து வியந்து போகிறேன். ரிஷிகள் கூட வியந்து ரசிக்கும் காதல் ரசமும், கவியமுதமும் கவிஞரின் வரிகளில் கொட்டி வடியும் அழகு ரசம்.

காதல் ரசம் கம்பனின் வலையில் விழுந்து கவிஞரின் மடியில் கனிந்தது. அமுதக் காதலை அள்ளிப் பருகியும் தெவிட்டாத  கவிஞர், வெள்ளித்திரைச் சுருளுக்குள் அள்ளித் தெளித்த தங்க வரிகள்தான் எத்தனை எத்தனை!

காதலைப் பாடச் சொன்னால்  … நிஜக் காதலியையே  நமக்குமுன் கொண்டு வந்து நிறுத்தும் மந்திரக் கவிஞர் அவர்.

மதுவை  சுவைத்தால் கவிதை  பிறக்கும் என்பர்…! நான் கவிஞரின் கவிமதுவை சுவைத்ததால் என்னுள் கவிதை  மலர்ந்தது இன்னும் மலர்ந்துகொண்டே  இருக்கிறது.

கவியரசு ஒரு தத்துவப் பள்ளிக் கூடம். ஏழைப் பாமரனின் உதடுகளில் கூட தத்துவத்தைப் பேசவைத்த  ஆசான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் பாமரன்கூட இன்றளவும் பேசும் தத்துவ வசனங்கள் கவிஞரின் திரைப்பாடல் தத்துவ வரிகள்.

பட்டியிலும் தொட்டியிலும் பாட்டின் வடிவத்தில் தமிழன்னையை துதிக்க வைத்தவன் !

“பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப்
புரிந்து கொண்டால்  அவன் தான் இறைவன்…”

தத்துவத்தின் முத்திரையாக மக்களின் மனத்தில் என்றும் வாழும் முத்தானப் பாடல். தன்முனைப்பாற்றலுக்கு இதைவிடச் சிறந்த வரிகள் உண்டா?

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை  வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று  சொல்வதில்லையா? தன்னைத்
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?

கீதாவுபதேசம் படித்து பாமரனுக்கும் கண்ணதாசா உபதேசம் தந்தவன். முன்னது ஆழம்மிக்க பமாழி.,. பின்னது அர்த்தம் மிக்க ஒளி.! இருட்டுக்குள் இருந்து தியானத்தில் தேடவண்டிய ஆன்மீகத்தை எளிய தமிழில் இலகு வெவளிச்சத்தில் எல்லோரும் அறிய ஒளிப்பாய்ச்சியவர் கவியரசர்.

“வீடு வரை உறவு …வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை…கடைசி வரை யாரோ”

வாழ்க்கையின் எல்லைக் கோட்டை அளந்து அதற்கான மைல்கல்லையும்  இந்த புண்ணிய வரிகளில் புதைத்து வைத்தவர் நம் கவிஞர்.

ஆட்டுவித்தால் யார் ஒருவன்…..எனும் பாடலின் வரிகள் அத்துணையும் தத்துவத்தின் அர்த்தமிக்க வடிவங்கள்.

“கடல்  அளவே இருந்தாலும் மயங்க மாட்டேன்
அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்”

என வாழ்வின் ஒப்புயர்வற்ற உன்னத நிலையை  எடுத்துச் சொன்னபதோடு அதுபோல் வாழ்ந்தும் காட்டியவர்.

‘சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்’

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தவர், கவியரசு கண்ணதாசன்.

அவர் உடலால்தான் மறைந்தாரே தவிர உயிராய் நம்மோடு என்றென்றும்  வாழ்கிறார், அவரின் பாடல் வரிகள் இன்றளவும் நம்மூச்சோடு இணைந்து  இசைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *