திருமால் திருப்புகழ் (132)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
”கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————-
அறம்பாவம், பூமி சுரர்வானம், வாழும்,
நரன்தாவும் மந்திமற்றும் நான்கு, -புரம்யாவும்,
நாரா யணனனாய், நிற்கும் உணர்வினை,
ஏராள மானவொன்றாய் ஏத்து….(308)
இடுப்பில் ஒருகை, இணையவெண்ணை மத்தின்,
பிடிப்பில் மறுகை பதிய -உடுப்பியில்,
பின்னழகைக் காட்டிநிற்கும், பீலிமயிற் கண்ணனே
முன்னழகைப் பார்ப்பதெந்த மாது….(309)
அழைக்கும் குரலைக்கேட்(டு), ஆடா(து) அசங்கா(து),
உழைக்க வருவானவன் ஓடி, -மழைக்கு
குடையாய் மலையேந்தி, கோகுலம் காத்த
இடையன் இணைப்பே இருப்பு….(310)
மாதவன் கேசவன், மாலவன் மோகினி,
மாதவன் சபரீசன் மாதாவாம், -ஆதலால்,
அன்னையென்(று) எண்ணி, அணுகுவோரைக் காத்தருள்வான்,
தன்னையே கன்னையன் தந்து….(311)
ராவண காமத்தை, போவெனச் சொல்வீர்கள்,
வாவென நாளை விளம்பாதீர், -ஆவன,
செய்தோர் அகத்தினில், சாகேதன் ஸ்ரீகிருஷ்ணன்,
வைதாலும் வாழ்வான் வலிந்து….(312)
கருத்து டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
——————————————————————————————
அங்கை படுக்கையாய், அதரம் தலையணையாய்,
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய், -தொங்குமெழில்,
புல்லாக்கு மேல்குடையாய், வல்லா னுடன்வாழும்,
புல்லாங் குழலுந்தன் பேறு….(313)
———————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html