திருமால் திருப்புகழ் ( 134)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————

எங்கே இருக்கின்றீர், என்குரு நாதரே,
இங்கே இருமை இருளிலுள்ளேன், -சங்கே,
முழங்கு செவிடனென், மூளையில் எட்ட,
ஒழுங்கு முறையாய் உரத்து….(320)
சிரிரங்கா, வெண்ணை ,உறிரங்கா, வண்ணக்,
கரிரங்கா, மாகிரி ரங்கா, -சரிரங்கா,
இப்படி ஏத்தினால்தான், இல்லம் புகுவாயா,
அப்படி என்ன அழும்பு’’….(321)
தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்று,
அகந்தை அழித்தலாம் அது….(322)
கரஞ்சூழ் வாளும், கதிராழி சங்கும்,
அறஞ்சூழக் கொண்டுலகை ஆளும், -பரஞ்சோதி,
நாரா யணனே, நலம்செய் மனத்தனே,
சீராயர் சேயனே சத்து….(323)
மைகொண்ட கண்ணாளை, மார்கொண்ட கண்ணனை,
பைகொண்ட பாம்பில் படுத்தவனை, -வைகுண்ட,
ஏகா தசியில், எழுப்புவோர்(கு) எம்பாவாய்,
ஆக பரமபதம் ஆம்….(324)
கையே தலையணையாய், பைந்நாகம் பாய்விரிப்பாய்,
செய்யும் தொழில்யோக, சிந்தையாய், -செய்ய,
குமுதத்தாள் தாங்க, குமுதத்தாள் நீட்டி,
அமுதத்தன் தூங்கும் அழகு….(325)
——————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/
