தீராமல் எரிகின்ற தீ – பாடல்
–பி.எஸ்.டி.பிரசாத்.
கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள்.
பாடலை மெட்டமைத்து, இனிமையான இசை சேர்ப்பு செய்துள்ளவர் திரு.குருபாத் அவர்கள்.
பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/theeramal-erigindra
பாடல் வரிகள்:
தீராமல் எரிகின்ற துனி என்னும் தீயாம் !
தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !
தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !
தீன தயாளனாம் சாயி ! தீன தயாளனாம் சாயி !
தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி ! தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி !
(தீராமல்)
தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !
தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !
எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !
எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !
(தீராமல்)
திருமூர்த்தி பாதி ! திருமாலும் பாதி !
குருசாயி சக்தி ! பாடவரும் சித்தி !
(தீராமல்)
ஆனந்தத் தீ ! ஆராதனைத் தீ !
ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !
ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !
(தீராமல்)

வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com
படம் உதவிக்கு நன்றி: http://tamil.oneindia.in/art-culture/essays/2012/nithyasri-perform-cincinnati-aid0136.html
a good song rendered well. In fact theeraamal erikinra thee would have a more forceful pallavi. The other words make it more prosaic. I wish prasad comes out with more songs in this genre. Wish hom good luck. K Ravi
Superb lyrics and composition.great rendering by smt.Nithyashree