சு. ரவி

திரு கேசவ் கிரேசி மோகனுக்கு சாக்லேட் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தளித்த மேடையில் அவ்வோவியத்திற்காக ஆதிசங்கரரின் கோவிந்தாஷ்டகம் சந்தத்தில் என்னால் இயற்றப்பட்ட பாடல் இது. ( வடமொழி ஸ்லோகத்தில் உள்ளதுபோலவே, ஒற்றெழுத்து நீங்கலாக அடிஒன்றுக்கு 18 எழுத்துகள் கொண்டமைந்த விருத்தம்),

பால் போன்ற ஆகாசமும், இடையிலே சாக்லேட் பேப்பரை முடியிலும் இடையிலும் தரித்த சாக்லெட் கோவிந்தனும், அவன் பாதம் வருடும் பசுவும் கொடுத்த உந்துதலே இப்பாடல்..

531F0C5D-D48D-4657-A027-81176E23ADD8

பால்பொங்கும்வெளி போல்பொங்கும் மன
ஆகாசம்- பர மாகாசம்,
பால்பொங்கும் திரை மேல் துஞ்சும் இறை
தான் வாழும் இடம் கோலோகம்
பால்பொங்கும் பசு கால்நாடும் சுகம்
ஆச்சர்யம் -அதன் வாத்ஸல்யம் !
கோல்கொண் டாவினம் மேய்க்கும் தெய்வதம்
கோவிந்தம் பர மானந்தம்!

08FC3C1F-5150-4D5C-BD8A-37291B884161

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *