மீண்டும் சாக்லேட் கிருஷ்ணா
சு. ரவி
திரு கேசவ் கிரேசி மோகனுக்கு சாக்லேட் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தளித்த மேடையில் அவ்வோவியத்திற்காக ஆதிசங்கரரின் கோவிந்தாஷ்டகம் சந்தத்தில் என்னால் இயற்றப்பட்ட பாடல் இது. ( வடமொழி ஸ்லோகத்தில் உள்ளதுபோலவே, ஒற்றெழுத்து நீங்கலாக அடிஒன்றுக்கு 18 எழுத்துகள் கொண்டமைந்த விருத்தம்),
பால் போன்ற ஆகாசமும், இடையிலே சாக்லேட் பேப்பரை முடியிலும் இடையிலும் தரித்த சாக்லெட் கோவிந்தனும், அவன் பாதம் வருடும் பசுவும் கொடுத்த உந்துதலே இப்பாடல்..
பால்பொங்கும்வெளி போல்பொங்கும் மன
ஆகாசம்- பர மாகாசம்,
பால்பொங்கும் திரை மேல் துஞ்சும் இறை
தான் வாழும் இடம் கோலோகம்
பால்பொங்கும் பசு கால்நாடும் சுகம்
ஆச்சர்யம் -அதன் வாத்ஸல்யம் !
கோல்கொண் டாவினம் மேய்க்கும் தெய்வதம்
கோவிந்தம் பர மானந்தம்!
சு.ரவி


