கிரேசி மோகன்

”அச்சுறுத்தும் பூதமா ! அன்றிமாத்ரு பூதமா!
எச்சரிக்கை யோடுன்னை நச்சரிப்பேன்! -உச்சமது,
அண்ணா மலைராணி, எண்ணா மனம்வெளுக்க
வண்ணாத் திகழுதையில் வா’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
கழுதைமீதேறி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நான் தான் என்கிறாளா, கையில் ரத்தக்கறையுடன் அரிவாள், சுருக்குப்போட்டுக் கதையைச் சுருக்க முடித்திட கையில் சுருக்குக்கயிறுடன் வந்தேன் என்கிறாளா, கலியுக நீதிதேவதை. சபாஷ் கேஷவ்! க்ரேஸி உங்கள் கவிதைக்கும் சேர்த்துத்தான்!
-ஏகாந்தன்