ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

 

AADALUDAN...

 

ஆடலுடன் பாடலைக் கேட்டு..

தமிழ்த்திரை வரலாற்றில் எத்தனையோ பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற போதும்.. இப்பாடல் அவற்றுக்கெல்லாம் தலைமை தாங்கும்!

மக்கள் திலகத்துடன் இணைந்து விஜயலட்சுமி ஆடல்தர.. மனதில் மகிழ்ச்சியைக் கொட்டிக்கவிழ்க்கின்ற திரைப்பாடலாய்!  பள்ளி கல்லூரி தளங்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் அன்றும் இன்றும் என்றும் என பெரும்பாலும் இடம்பெற்ற இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு!  ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து ஆடியது இந்தக் காட்சியில் …

கதையின் போக்கை உள்வாங்கி கவிஞர் ஆலங்குடி சோமு வரைந்தளித்த இப்பாடலை உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்! இதில் ஆடலும் உண்டு!  பாடலும் உண்டு!  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் புதுமைகளை நாளும் கொண்டுவரவேண்டும் என்கிற அவரின் உள்மனதின் தாகம் – வட இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் பஞ்சாபி நடனம் பாணியில் வழங்கிய முத்திரைப் பாடல்!

http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw
காணொளி: http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

ஆடலுடன்பாடலைக்கேட்டு
படம்: (குடியிருந்த கோவில் (1968)
பாடல்: ஆலங்குடி சோமு
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
………………………………………………………………..

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு

விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் ………………….
                       Alangudi+Somumsvtmsps

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *