கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
”மரணக் கிணற்றில் முராரியவன் குட்டிக்
கரணமிடு கின்றான் குஷியாய், -சரணமென்று,
கன்றாய்த் துரத்தியவன் , காலைப் பிடித்திட,
வென்றாய் ஜனன வழக்கு’’….கிரேசி மோகன்….
சிறு வயதில் அப்பாவோடு ‘’எக்ஸிபிஷன்’’ போகையில் ,மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிள் விடும் வீரன் நினைவுக்கு வந்தான்….
‘’புனரபி ஜனனம் புனரபி மரணம்…பாஹி முராரே…. பஜ கோவிந்தம்’’….