கிரேசி மோகன்

 

கோதைக் காப்பு….மார்கழி ஸ்பெஷல்….

 
இவை நான்கும் கேசவ் ஓவியம் பார்த்த பரவசத்தில் எழுதியது….
——————————————————————————–

crazy
“பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
கோதையாய்க் கோலம் கொடுத்து”….

“வேண்டாத மூப்பினை வாலிபத்தில் ஏற்றுப்புள்
கீண்டானைக் காதலிக்க கோதையாய் -ஆண்டாளாய்,
ஆனாளோ அவ்வை அதனால்தான் பாசுரங்கள்
தேனாய் இனிக்கின்ற தோ”!….
“ஆடிப்பூ ரத்தில் அவதரித்த ஆண்டாளின் ,
சூடிக் கொடுத்த சுடர்கொடியின், -ஜோடித்து
பாக்களாய் ரங்கமன்னார் பாதத்தில் இட்டநறும்
பூக்களே நம்பாது காப்பூ”….

“சாரங்க மன்னார்க்கு சொல்லித் திருப்பாவை
பாரங்க மன்னாராய் பாதித்து, -சீரங்கம்
தாதை யுடன்சென்று தாரமாய் மாறிய
கோதைமுகம் பூசுமஞ்சள் காப்பு”….
’ கோதைக் (ஸ்ரீவில்லிபுதுர் நாடகம் போடச் சென்றபோது)காப்பு’’

————————————————————————————————————————————————————

ஒருநூற்று நாற்பத்தி மூன்றுரைத்த தாயே
கருமூர்த்தி மேல்கொண்டு காதல் -திருவில்லிப்
புத்தூரின் வாழ்வே பெரியாழ்வார் பெண்பிள்ளாய்
கொத்தலர் பூம்பாவாய் காப்பு….(1)

கயிற்றுதரக் கண்ணன்மேல் காதல்கொண்(டு) அன்று
இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
தாதையுடன் சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
கோதைக்கை கோகிலமே காப்பு….
….(2)

வினதை மகனும் புனிதர் மகளும்
இனிதாய் இடவலம் ஏள -அணிதிகழ்
அங்கமதில் வில்லிபுதூர் ஆண்டாள் அணிந்ததேற்ற
ரங்கமன்னார் கோலம் ருசி….(3)

கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
கிள்ளைகொள் கோதாய் காப்பு….(4)

கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
உக்கார வைத்தோளை உன்னு….(5)

எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
பெத்தெடுக் காதஅந்தப் பிள்ளையை -முத்துடை
பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு….(6)

ஓர்கழி கையேந்த ஆர்குழல் வாயூத
ஊர்வன மேய்த்தோ னுடனொன்ற -தார்குழல்
மார்கழி நீராடி மையிட்(டு) எழுதாத
கூர்விழித் தாமரை காப்பு….(7)

வெப்பறியா மார்கழியில் துப்புரவாய் நீராடி
ஒப்பறியா நோன்பிருந்து உத்தமர்க்கு -சொப்பனத்தில்
இல்விதித்து இங்கிழுத்து வில்லிபுதூர் மண்ணிலம்மிக்
கல்மிதித்த காலிரெண்டும் காப்பு….(8)

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே
நேர்வழியில் எம்மை நடத்து….(9)

”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
பைகொண்ட பாம்பணைவோன் பார்….(10)

’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
துப்புர வாகும்வுன் தீங்கு’’….(11)

’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….(12)

’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….(13)

“பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
கோதையாய்க் கோலம் கொடுத்து”….(14)

 

ஆடிப் பலன்
————–

”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
வாடிக்கை யாய்வந்து வில்லிபுதூர் -ஜோடிக்கு
முன்நின்று தப்பாது முப்பதைச் சொல்வோர்க்கு
பின்நின்று வெற்றியளிப் பு’’….(15)….
——————————————————————————
’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….கிரேசி மோகன்.

’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….கிரேசி மோகன்…

’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
துப்புர வாகும்வுன் தீங்கு’’….கிரேசி மோகன்….

போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம்….
“ஏகபோகம் ஆகிறாள் ஏரார்ந்த கண்ணியவள்
நாகமிசை நர்த்தன நாரணன் -பாகமாக;
போகியன்று ஆண்டாள் பெருமாளை சேர்கிறாள்
வாகீச பெண்மைக்கு வாழ்த்து”…

“பழயன விட்டு புதியன பூண
மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
ரத்தாள் பதம்பிடித்து ரங்கன் அழைக்கின்றான்
அத்தாளை அம்மிமிதிக் க “….

“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
பெரியாவான் இல்லம் பறந்துபோய் கேட்டான்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….
I LOVE YOU (143) அன்றே சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு ஆண்டாள்….
“பட்டர் பிரான்பெண்ணை BUTTER பிரான்கண்ணன்
ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் -லெட்டராய்;
நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலாக,
ஆத்தியது ஐலவ்யு ஆச்சு”….
———————————————————————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *