-செண்பக ஜெகதீசன்
சுழலும் காலச் சக்கரமும்
சுற்றிச் சுற்றி வருகிறதே,
நிழலும் நின்று நிலைப்பதில்லை
நிலையா இன்ப துன்பமதாய்,
பழகிடு நல்லதே செய்வதற்குப்
புறத்தே கெட்டதைத் தள்ளிவிட்டே,
அழைக்குதே புலரும் புத்தாண்டு
அன்பின் அறுவடை செய்திடவே…!

Leave a Reply