ஆன்ம கண்ணன் -ஜீவன் ராதை….
கிரேசி மோகன்
அருணாசல அன்பர் திரு.G.காமேஸ்வரன் இந்த ஓவியத்தை அனுப்பினார், வெண்பா எழுத பணித்து….
“கோடாக நீரில் கிழித்தாலும் , நிச்சலன , –
ஆடாத நெஞ்சிலே ஆண்டாள்கண் -ணாடிபோல் ,-
ஆற்றில் கிருஷ்ண அனுபவம் கொள்வதற்கு ,-
நோற்றனள் மார்கழி நோன்பு “….கிரேசி மோகன்….
“பிம்பமாய்க் கண்ணன் பிரதிபிம்ப மாய்ராதை –
அம்பலம் ஆனது ஆற்றுநீர் ; -தம்பலத்தை –
ஆத்துநீரில் ஆடொன்று பாத்து சிலிர்த்ததாம் –
ஆத்துமாதான் சிங்கமென்(று)அம் மே “….கிரேசி மோகன் ….அம்பலம் -கோவில் ….ஆட்டுமந்தையில் கலந்து விட்ட சிங்கம் பழக்க தோஷத்தால் ‘’மே’’ என்று கனைத்துத் திரிந்ததாம்….எதேச்சையாக ஆற்று நீரில் தன் பிம்பம் சிங்கமாய் இருப்பது கண்டு தன் சொரூபம் உணர்ந்து கர்ஜித்ததாம்….மந்தைவெளி அகந்தை ஆடு நாம்….நம்முள் இருக்கும் நரசிங்கமே கண்ணன்….இதை உணரவைக்கும் ஆற்று நீரே தெளிவான அசலன குரு….உபயம் பகவான் ஸ்ரீ ரமணர்….
அருமை மோகன். வாழ்த்துகள். கே.ரவி