இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு…

0

–கவிஞர் காவிரிமைந்தன்.

 

குடியரசு

 

 

உள்ளத்துள் உள்ளது கவிதை என்றான் மகா கவி பாரதி.. உணர்ச்சிப் பிழம்பாய் அவன் படைத்த கவிதைகள்தாம் விடுதலை வேட்கைக்கு வித்திட்டன என்பதை நாம் அறிவோம். கவிஞன் என்பவனின் உள்ளம் எத்தகு களமாக அமைகிறதோ அவ்விதமே.. அவனிடமிருந்து கவிதைகள் பூப்பூக்கும் அல்லது கந்தகம் வெடிக்கும். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த பாரத விலாஸ் திரைப்படத்தில் தேச ஒற்றுமையைக் காட்டும் அருமையான பாடல். இதயம் தொடும் இசையமைப்பை மெல்லிசை மன்னர் வழங்கியிருக்க.. கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் .. ஒரு பாட்டுப் பட்டாளம் பாடியிருக்க.. நடிகர்கள் நடிகைகளும் இணைந்து வழங்கிய இப்பாடலை 26.01.2015 – இந்தியக் குடியரசு தினத்தில் பரிமாறுவதில் உளம் மகிழ்கிறேன்.

இனத்தால் தமிழரென்றும்.. இந்தியனென்றும் கவிஞர் வாலி தந்திருக்கும் கவித்துவ முத்திரைகள் காலத்தால் அழியாதவை.

பல்வேறு வேறுபாடுகள் எமக்குள்ளே இருந்தாலும் இந்தியன் என வரும்போது .. நாடி நரம்புகள் ரத்த நாளங்கள் ஒன்றுபட பெருமை மிக்க எம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்வதும்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும் எமது தனித்துவம் என்று உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிற நாடு இந்தியா..

ஹிந்து. முஸ்லீம்.. கிறிஸ்துவர் சீக்கியர் என்று பல்வேறு கதா பாத்திரங்கள் திரையில் தோன்ற.. மத நல்லிணக்கத்திற்கு.. என ஒற்றுமைக்கு.. இலக்கணம் வகுத்திடும் வண்ணம் எடுக்கப்பட்ட படமிது. குறிப்பாக, இந்தப் பாடல் ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிரச் செய்யும். கற்பனை வளத்தில் மட்டும் பூத்த பாடல் கவிதை மனம் அல்ல. கவிஞரின் உள்மனதில் இருந்த உணர்வின் ஊற்று இது! கவிதை மணம் தவிர தமிழ் மணத்துடன் தேசிய மணமும் நிறைந்திருந்தது. நம் நெஞ்சில் நிலைத்திருந்தது.

http://youtu.be/kG2Get7rZuU

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!

காணொளி: http://youtu.be/kG2Get7rZuU

 

படம்: பாரத விலாஸ் (1973)
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா

தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ

ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
பாரதவிலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்
சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *