வேண்டுதல் வெண்பாக்கள் – சாக்லேட் – கிருஷ்ணா

1

கிரேசி மோகன்

 

வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம்crazy
கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென்
வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய்
சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008

சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு
———————————————
கற்பகாம்பாள் சன்னிதியில்
———————————-
மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில்
சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர
பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு
ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008

பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————–
தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து)
அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன்
சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட
வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008
———————————————————————————-
சாக்லேட் – கிருஷ்ணா வெற்றி பெற வேண்டுதல்….
—————————————————————-
அரங்கேறி ஆதி அனந்தனின் மீது
உறங்கா(து) உறங்கிடும் மாலே-அரங்கேறும்
சாக்லேட் கிருஷ்ணாவை சக்சஸ்ஃபுல் ஆக்கயென்
வாக்கெட்ட வாராய் விரைந்து….(4)….23-5-2008

பதிலுக்கு சு.ரவி எழுதியது
———————————
நாடகம் நன்றாய் அரங்கேற, ஊரெல்லாம்
கூடி மகிழ்ந்து குதுகலிக்க -ஊடகங்கள்
பாராட்ட சாக்லேட் கிருஷ்ணா பவனிவர
தார்சூடி வெல்க தழைத்து….(5)….23-5-2008

சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-

ஞாலத்தை உண்டுமிழ்ந்த காலத்தில் ஆலிலையில்
பாலொத்தப் பாதம் பருகியவா -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணாவை மாம்பழத்துக்(கு) ஈடாக
டாக்-ஃஆப் தி-டவுன் ஆக்கு….(6)….20-7-2008
கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
——————————————————-
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவை வருடிட
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(7)….12-9-2008
——————————————————

கேசவ் ஓவியத்துக்கு சு.ரவி எழுதிய கவிதை படித்து எழுதியது
————————————————————————

வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
சாக்கலேட் ஆக்கினான் கேசவன் -பாக்குளிட்டு
பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
நாலா யிரத்திலொன் று….(8)….9-9-2008

பாரதி விழாவுக்காக சாக்லேட் கிருஷ்ணா
போடுவதாக இருந்தது….வானவில் பண்பாட்டு மையத்திற்காக…
பாரதி வீடு சற்றே சரிந்ததால் போடமுடியவில்லை….வக்கீல் க.ரவிக்கு எழுதியது
————————————————————————————————
கண்ணனென் சேவகன் கண்ணனென் காவலன்
கண்ணனென் மந்திரி நண்பனென -சொன்னவன்
கண்ணனென் சாக்லேட் கிருஷ்ணாவாய் ஆக்கினான்
புண்ணிய மாச்சென் பிறப்பு….(9)….29-9-2008

க.ரவி பதிலுக்கு எழுதிய வெண்பா
———————————————
அற்புதம் வெண்பா அடடா உனக்கிந்த
சொற்பதம் வாய்த்ததென்ன சூட்சமமோ -வெற்புக்(கு)
குடைபிடித்த வன்பேரில் கூத்து நிகழ்த்தத்
தடையின்றி பொங்கும் தமிழ்….(10)….30-9-2008

சாக்லேட் கிருஷ்ணா 100வது நாடகப் பூர்த்தி
————————————————————-
நூறு முடித்திட தேரை விடுத்தவா
நூறுநா னுறில் நிலைத்தவா -நூறு
முறையெங்கள் சாக்லேட் கிருஷ்ணா படைத்த
இறையின்று போலென்றும் இரு….(11)….30-11-2008
வேலூரில் சாக்லேட் கிருஷ்ணா….
——————————————
கோலோடு, ஊது குழலோடு, கோகுலத்தார்
தோளோடு தோள்சேர்த்த தோழனே -வேலூரில்
நாடகம் சாக்லே கிருஷ்ணா நலம்காண
ஊடகமாய்க் கண்ணா உத்வு….(12)….04-01-2009

ஈரோடில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
நூறோட பாரதத் தேரோட வைத்தவனே
நூறோடு நாற்பதாம் நாடகமாம் -ஈரோடில்
சீராட வைத்திடு சாக்லேட் கிருஷ்ணாவை
நாரோடு பூவாய் நுழைந்து….(13)….24-1-2009

கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————

கோவையில் சாக்லேட் கிருஷ்ணா நாடகச்
சேவையை செவ்வனே செய்திட -ஆவையும்
ஆய்க்குலப் பாவையும் மேய்த்தவா மாயனே
வாய்க்குளே வாக்காக வா….(14)….1-2-2009

திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————–
ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
தாதவிழ் பூவாய் மலர்….(15)….06-02-2009
மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்தோய் -உச்சி
மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)….07-02-2009

சாக்லேட் கிருஷ்ணா 150தாவது நாடகம்
—————————————————–

நூறோடு அம்பதாம் நாடகம் நாளைக்கு
தேரிடர்ந்த கண்ணன் திருவருளால் -சீரோடு
சேர்த்து சிறப்பாக்க சாக்லேட் கிருஷ்ணாவை
பார்த்தனின் சாரதி பார்….(17)….21-2-2009
கேசவ் ஓவியத்திற்கு நன்றி
———————————-
விழிகள் சொருகிட வேய்ங்குழல் ஊதி
பொழிகின்ற ஆகாசப் பாலை -எழிலுடன்
கேசவன் உண்கின்ற கோலம் வரைந்தநீர்
ஆசுகவி ஓவியன் கேசவ்….(18)….23-2-2009

கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————

பாவைநப் பின்னைக்காய் தாவும் எருதாண்டோய்
பாவைநப் பின்னைக்காய் ஆவை அடக்கியவா
தேவை எமக்குன் துணைகண்ணா -கோவை
நகரிலின்றும் நாளையும் சாக்லேட் கிருஷ்ணாவை
நிகரிலாத வண்ணம் நடத்து….(19)….11-04-2009

பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————–

அங்குள்ள தூணில் அடங்கிக் குதித்திரண்யன்
அங்கமதைக் கீண்ட அரியுருவே -பெங்களூரில்
நாடகம் சாக்லேட் கிருஷ்ணா நடக்கையில்
மேடையில் காப்பாய் மலர்….(20)….19-04-2009

சாக்லேட் கிருஷ்ணா அப்த பூர்த்தி
——————————————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்சொல்லி
நாங்கள் நடத்திய நாடகத்தை -பாங்குற
ஓராண்டு தாண்டியும் ஓயாது ஓட்டுவது
சீராயர் கண்ணன் சவுக்கு….(21)….23-05-2009

சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————-

ஞாலத்தைப் பேரூழி காலத்தில் உண்டுமிழ்ந்து
ஆலத்தில் தூங்கிய ஆழிவண்ணா -சேலத்தில்
சங்கடம் இல்லாது சாக்லேட் கிருஷ்ணாவை
மங்களம் ஆக மலர்த்து….(22)….13-06-2009
மதுரையில் சாக்லேட் கிருஷ்ணா
—————————————–
ராணி லலிதாங்கி ஸ்ரீராஜ மாதங்கி
மீன்விழியால் சொக்கனை மீறிநிற்கும்-ஆண்மகளே
கூடலில் எங்கள் குழுவின் பெயர்விளங்க
நாடகத்தை நன்கு நடத்து….(23)….05-07-2009
கோயம்புத்தூரில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-

கோவை சாரதா அப்பா ”கோபாலன் சார்” எழுதியது….
————————————————————————
காணவே காத்துள்ளேன் கற்பூரச் சொல்லழகா
நாணேறும் அம்பாஇ நகைச்சுவையை -மாண்புறவே
செல்ல செலுத்தியெமை சிந்திக்கச் செய்திடும்
வெல்லப்பா மோஹனமே வெல்….(24)….10-09-2009
——————————————————————————

தாயன்பில் கட்டுண்ட தாமோ தராநாங்கள்
கோயம்புத் தூரில் கொடிகட்டி -ஆயனே
சீரும் சிறப்புகளும் சாக்லேட் கிருஷ்ணாவால்
நேர நிகழ்வை நடத்து….(25)….12-09-2009

பாண்டிசேரியில் இரு நாடகங்கள்….
———————————————-
கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்த பரந்தாமா நீவந்து
நேரில் இருந்து நடத்து….(26)….03-10-2009

கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
பாரதம் செய்தமன பாரம் குறைந்திட
சேரில்(CHAIR) அமர்ந்து சிரி….(27)….03-10-2009

பெங்களூரில் இரு நாடகங்கள்….
———————————————-
மங்களமாய் மார்கழித் திங்களென்ற ஆண்டாளின்
கண்களுறை காதல் கருமுகிலே -பெங்களூரில்
எங்களிரு நாடகங்கள் ஏற்றமுற, வந்தமர்ந்து
பங்குபெற வேண்டுமதைப் பார்த்து….(28)….22-10-2009

பெங்களூரில் குஷா மகள் ஜானும், சு.ரவி மகள் பாரதியும்
விருந்தோம்பல் செய்ததற்கு நன்றி வெண்பா….
———————————————————————–
சோறும் ரசமும் சுவையான காய்களும்
மோரும் மணக்கும்மா காளியும் -ஜோராக
வாரிதி மேகமாய் வற்றாது தந்தது
பாரதி ஜானின் பரிவு….(29)….25-10-2009

கோவையில் நாடகங்கள்….
—————————————
ஏழை குசேலன் இதயம் சிரித்திட
தோழமைக்குத் தோள்கொடுத்த தெய்வமே -ஆழிவண்ணா
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
நாவில் நகைச்சுவையாய் நில்….(30)….06-11-2009

காரைக்குடியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————-

தேரை நடத்தி தனஞ்சயனைத் தேற்றியன்று
நூறை முடித்த நவநீதா -காரைக்
குடியிலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு
வெடிவிருந்தை வந்து வழங்கு….(31)….13-11-2009
ஹைதராபாத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————————-
வைதசிசு பாலனுயிர் கொய்திட சக்கரத்தை
எய்தனை நூறிகழ்ச்சி ஏற்றன்று -ஹைதரா
பாத்திலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா நகைச்சுவையில்
நூத்திலொன்(று) ஆக நடத்து….(32)….04-12-2009

திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
———————————————

தோப்புக் கரணமிட்டு , தந்தி சிரித்திட
சாப்பிட்ட சக்கரத்தை துப்பவைத்தோய்-காப்பாய்
திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணாவால் மக்கள்
சிரிச்சு மகிந்திடச் செய்….(33)….20-11-2009

மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-

மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(34)….09-02-2010

வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(35)….09-02-2010

செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(36)….09-02-2010

வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(37)….09-02-2010

தஞ்சையில் சாஸ்த்ரா கல்லூரியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————————————–
வெஞ்சிறை தோன்றி விடிவதற்குள் ஆய்ப்பாடி
தஞ்சம் புகுந்த திருமாலே -தஞ்சையில்
சாஸ்திரா காலேஜை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஹாஸ்யத்ரா காலேஜாய் ஹாக்கு….(38)….05-03-2010

விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(39)….13-04-2010

சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
வேலொத்த கண்மாதர் சேலை பறித்தாண்கள்
பாலுற்ற பாஞ்சாலி மேலளித்தோய் -சேலத்தில்
சாக்லேட் கிருஷ்ணா சிறப்பாய் நடத்தஅங்கு
கோகுலக் குட்டனே GO….(40)….08-05-2010

பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(41)….15-05-2010

செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(42)….15-05-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————

கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்ணுவோர்க்(கு) என்நன்றி இன்று….(43)….6-9-2010

எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(44)….7-9-2010
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
——————————————-

மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(45)….09-02-2010

வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
ஷோக்காய் சிரித்திடச் செய்….(46)….09-02-2010

செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(47)….09-02-2010

வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
மஸ்கெட்டில் வந்து மலர்….(48)….09-02-2010

விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
—————————————-
திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
மத்தாண்ட விட்டலா மேய்….(49)….13-04-2010

பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————-
செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(50)….15-05-2010

செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(51)….15-05-2010

ஹைதராபாத்தில் நாடகம்….
————————————
பெய்தவாளி ஏற்றன்று பார்த்தனின் சாரதியாய்
ஐதரப்பு வெல்லமகா பாரதத்தை -நெய்தவா
ஹைதரா பாத்தையே ஆனந்த பாத்திலாழ்த்த
செய்திட வேண்டுமெங்கள் ஜோக்கு….(52)….30-09-2010

வைதசிசு பாலன் வசைநூறு தாண்டிட
கைதவழ் சக்கரத்தால் கொன்றவா -ஹைதரா
பாத்திலெங்கள் நாடத்தைப் பார்த்தவர்கள் நெஞ்சிலே
பூத்திடச் செய்நகைப் பூ….(53)….30-09-2010

அயோத்தியார் பக்கமென்ற ஹைகோர்டின் தீர்ப்பால்
வயோதிகம் காணும் வழக்கு….(54)….30-09-2010

நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(55)….30-09-2010
கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
——————————————————————

கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
எண்னூவோர்க்(கு) என்நன்றி இன்று….(56)….6-9-2010

எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
ஒப்பற்ற நட்பின் உயர்வு….(57)….7-9-2010

ஹைதராபாத்தில் நாடகங்கள்….
—————————————-

நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
தேவுடு காமெடியாய்த் தோன்று….(58)….30-09-2010
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா….
———————————————
அய்யனே, ஆயர்தம் பையனே, ஆழிசங்குக்
கையனே, அந்தரான்மா காண்போர்க்கு -மெய்யனே
கோவையில் சாக்லேட் கிருஷ்ணா ஜெயித்திட
தேவையுன் பக்கத் துணை….(59)….25-12-2010

கோயம்புத்தூரில் நாடகம்
———————————-
தாயன்புக்(கு) உட்பட்ட தாமோ தரனேநீ
காயம்பத்(து) ஏற்றோய் கலிதீர்க்க -கோயம்பத்
தூரிலெங்கள் நாடகத் தூறல் மழையாக
நேரில்வா நீர்வண்ண னே….(60)….07-01-2011

கும்பகோணத்தில் சாக்லேட் கிருஷ்ணா
————————————————-
குடம்குடமாய்ப் பால்வெண்ணெய் கோகுலத்தில் உண்டு
அடர்ந்தானாய் ஆரா அமுதாய் -கிடந்தாய்
குடந்தையில் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பாய்
நடந்திட வேண்டும் நகைத்து….(61)….16-01-2011
டெல்லியில் சேஷாத்திரி சபா ”நாடக ரத்னா”
விருது தந்த போது….
———————————————————-

தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -அலைநகரும்
பாற்கடல் தன்னில் படுத்த பெருமாளே
நேர்கடன் பட்டேன் நினக்கு….(62)….04-03-2011

(ALTERNATIVE வெண்பா)
————————————
தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
கலைநா டகரத்னா கண்ணா -மலைநகர்த்தி
சுண்டு விரலில் சுமந்த கடவுளுனை
விண்டு வழுத்தல் விருது….(63)….04-03-2011

டெல்லி குளிரில் நடுங்கிய போது
———————————————
நாடக ரத்தினாவை நான்பெற டெல்லியில்
வேடமிட்டேன் கம்பளி ஆடையில் -பாடாய்
குளிரெனைக் கொல்லுது குன்றேந்தி கண்ணா
தளிர்விரலால் முன்போல் தாங்கு…(64)….05-03-2011

இரா.முருகன் பதில் வெண்பா
————————————-
தெம்பாய் கரம் கஜர்கா ஹல்வாவும்
சொம்பில் ருசியான காப்பியும் -நம்பியே
துளிராக வெற்றிலையும் நாமணக்க மென்றால்
குளிர்போகக் கொள்வீர் விருது….(65)….05-03-2011

கோவையில் மீசை ஆனாலும் மனைவி….
—————————————————
சங்கு சுடராழி சாரங்கம் நந்தகி
அங்கை தனிலேந்தும் அச்சுதா -கொங்கிலே
மீசையா னாலும் மனைவிக்குக் கைத்தட்டல்
ஓசை இடவை உரத்து….(66)….26-03-2011

ஆவினைக் காக்கவன்று கோவர்த் தனக்குன்றை
பூவினைப் போல்சுமந்த பாலகா -கோவையில்
மீசையா னாலும் மனைவியை மக்களின்
ஓசை சிரிப்பால் உயர்த்து….(67)….27-03-2011

கடலூரில் டாக்டர் விஜயராகவனுக்காக ”சாக்லேட் கிருஷ்ணா”….
————————————————————————————
படம்பத்து நூறுகொண்ட பஞ்சணையில் சாய்ந்துபாற்
கடலூரில் கண்வளரும் கண்ணனே -கடலூரில்
கூடியோர் சாக்லேட் கிருஷ்ணாவை உச்சியில்
சூடிடச் செய்வாய் சிரித்து….(68)….30-03-2011

பெங்களூரில் மதில்மேல் மாது & அல்லவுதீன்….
————————————————————
தோலை வெளுக்கத் திருட்டுத் தயிர்வெண்ணை
பாலுக்(கு) அலைந்த பரம்பொருளே -நாளைகர்
நாடகாவில் எங்களிரு நாடகங்கள் வெற்றியை
நாட அருள்செய்வாய் நன்கு….(69)….15-04-2011

பெங்களூரில் ”மாது பிளஸ் டூ & மீசை ஆனாலும் மனைவி”….
——————————————————————————–
பங்குபெற பாண்டவர்க்காய் பாரதம் செய்தவனே
சங்குகர சுற்றும்கை சக்கரனே -எங்களிரு
பெங்களூர் நாடகங்கள் பேஷாகப், பண்டரியில்
செங்கலேறி நின்றோய் சரண்….(70)….20-05-2011

உன்நடத்தைக் கண்டன்னை உன்னை உரலிலிட
முன்னிடந்து சென்று மருதொடித்தோய் -கன்னடத்து
பெங்களூரில் எங்கள் ”பிளஸ்டூக்கும் மீசைக்கும்”
பொங்கிடச் செய்வாய்கும் பல்….(71)….20-05-2011

சங்கர நாரண சங்கம சாஸ்தாக்கு
கொங்கை அமுதளித்த கோபாலா -எங்களின்
ஹாஸ்யம் சவுடையா ஹால்வரு வோரினட்ட
காஸ்ய சிரிப்பாயாக் கு….(72)….20-05-2011

முன்னூர்ந்து தேரில் மகாபா ரதம்செய்து
முன்நூறை ஐந்துக்காய் மாளவைத்தோய் -முன்னூறு
ஐம்பதுக்கும் மேல்தாண்டி ஆடியன்ஸை சாக்லேட்டால்
மெய்மறக்கச் செய்வாய் மகிழ்ந்து….(73)….23-05-2011

திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா….
————————————————
உச்சிமலைக் கோட்டை ஒருகொம்பன் உத்தியினால்
மச்சுமதில் காவிரிசூழ் மாநகர்வாழ் -கொச்சுரங்கா
சாக்லேட் கிருஷ்ணா சிரிப்புமழை பெய்திடனும்
ROCKFORTடில் நாளைக்கு ராவு….(74)….22-09-2011

ஈரோடு, கோவையில் நாடகங்கள்….
———————————————–
போராடும் பாண்டவர்க்காய் பாரதம் செய்தன்று
நூறோட வைத்த நவநீதா -ஈரோடு
கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
தேவையுன் பேரா தரவு….(76)….07-10-2011

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வேண்டுதல் வெண்பாக்கள் – சாக்லேட் – கிருஷ்ணா

  1. உன்பாவான வெண்பா,
    படிக்க நன்பா,என் நண்பா,
    படித்தேன்,மகிழ்ந்தேன்,தமிழ் தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *