பெண்கள் தினம்

”பெண்கள் தினத்தில்” பகவான் ஸ்ரீரமணர் பசி தீர்த்த
பெண்கள்….எச்சம்மா பாட்டி, முதலியார் பாட்டி, கீரைப்பாட்டி
இவர்களை நினைப்போம்….
”போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
தொழுத விதம்தான் தவம்”….
”முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
கீரைக் கிழவியாம் காண்”….கிரேசி மோகன்….
