— கவிஞர் காவிரிமைந்தன்.

மன்னிப்பு

மலரிதழ் திறப்பு எப்போது தெரியுமா? மனிதர்கள் கண்டதுண்டா? இயற்கையின் நிகழ்வினில் எல்லாம்.. எப்போதும் ஒரு ரகசியப் பதிவாகவே இருக்கும்! அவையவை தத்தம் இயல்பினில் இயங்கிக் கொண்டிருக்க.. கவிஞர்களின் கற்பனை வலை விரிப்பில் மட்டும் கருத்து முத்துக்கள் – அந்த ரகசியங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கும்!

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்

‘மன்னிப்பு’ திரைப்படத்திற்காக ஒரு மந்தகாசப் பாடல் ஒன்றை கவிஞர் வாலி அவர்கள் தீட்டியிருக்கிறார். அந்த மாலைப் பொழுதில் மங்கிய நல் நிலவொளியில் காதலர்கள் சந்திக்கின்றனர்! முத்தமிழும் மோகனமும் கூடிநிற்க.. காதல் பாமாலை சூடுகின்றனர்!

நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

அழகிய தமிழ்மொழியில் எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைக் காணுங்கள்!

முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலே டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் இழைந்தோடும் இனிய நாதமிது! இதுபோன்ற பாடல்களை ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனந்த ராகமிது ஆரம்பமாகிறது! அணைக்கின்ற வேளையிது.. அனுபவிப்பெல்லாம் அனுபல்லவியாகிறது! கவிதை மழை பொழிகிறது! இசையருவி வழிகிறது! இதயமது நனைகிறது! இன்னுமென்ன சொல்ல வேண்டும் இந்தப் பாடல்பற்றி!!

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நாட்டியச் செல்வி வெண்ணிற ஆடை நிர்மலாவும் திரையில்…

http://youtu.be/d3WYzyc_8ME

காணொளி: https://www.youtube.com/watch?v=d3WYzyc_8ME&spfreload=10

 

பாடல்: வெண்ணிலா வானில் வரும் வேளையில்
திரைப்படம்: மன்னிப்பு (1969)
இயற்றியவர்: வாலி
இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

_______________________________________________________________

வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ………………..
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
கன்னி என்தன் வடிவமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
மஞ்சள் வெயில் மாலை அது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
முத்து ஒன்று பிறந்து வரும்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *