— கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

 

lotto-logo-ballsஎமது தொழிற்சாலை முகப்பில் ராஜாவின் பிரேதம் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது.

ராஜா நன்றாக வேலை செய்வான். வேலை இடத்தில் பல பேரைச் சேர்த்து ‘பவர் போல்’ போடுவான். ஆரம்பத்தில் இலக்கங்களைச் சரி பார்த்த நண்பர்கள், காலப் போக்கில் அவனில் நம்பிக்கை வைத்து அவனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் வேலை மாறி தொலைதூரம் போனான். அங்கே மாளிகை கட்டினான். இன்று கொலையுண்டு கிடக்கின்றான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *