சிவபிரதோஷம்
-மீ.விசுவநாதன்
சந்திரனைக் கொண்டாய் ! நீண்ட
சடையில் கங்கை வைத்தாய் !
செந்தீயைக் கையில் கொண்டாய் !
நீலக் கழுத்தில் நாக
சந்தனத்தைப் பூசி நின்றாய் !
சத்த உடுக்கை கூட
தந்திரமாய்க் கையில் கூட்டித்
தாளங் கொட்டு கின்றாய் !
புயலெனவே சுற்றி நித்தம்
புதிதாய் ஆடு கின்றாய் !
முயலகனைக் கூடக் காலில்
முட்டிப் பிடித்தி ருப்பாய் !
நயமுடனே பணிந்து நானும்
நடரா ஜநுனைக் கேட்பேன்
பயலிவனின் பாப மூட்டைப்
பந்தை எங்கு வைத்தாய்!
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா, மா, மா, மா )