கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
கடவுளின் கார்-டிரைவர் ஆக இரு….கல்யாணத்திற்கு கடவுள் சென்றால் ‘’டிரைவருக்கு விருந்து மொதல்ல வையுங்கப்பா” என்று வாத்சல்யமாய் சிபாரிசு செய்வார்….இந்த உலகம் ஆண்டவன் வீடு….அதில் நீ விசுவாசமான வேலைக்காரனாக இரு என்பது போல பரமஹம்ஸர் கூறுவார்….’’கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி….விசுவாசி’’….
‘’மேதினம் இன்றும்ஆ மேய்க்கின்ற உத்தமன்,
ஊதியம் இன்றி உழைக்கின்றான், -ஆதியிந்த,
கண்ணனுன் தெய்வம் , கரம்கொடுக்கும் கூலியாள்,
எண்ணவனை BOSSசாய் ஏற்று’’….கிரேசி மோகன்….

