கிரேசி மோகன்

crazy

துருவ சரித்திரம்

 

——————–
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டுcrazy1
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….(1)

சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….(2)

கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….(3)

மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
கரனை தரிசித்தான் கண்டு….(4)

வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்crazy3
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து….(5)

கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….(6)

ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….(7)

கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….(8)

உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….(9)

மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன் அளிப்பு….(10)

பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….(11)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *