கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கார்பட்டு மேனியன் கண்ணன் குழலெடுத்து,
சார்பட்டா ராகத்தில் சங்கீதம்: -பார்பட்ட,
பாரம் விலக்கிட, பாரதப் போர்நெருங்கும்,
நேரமவன் நெஞ்ச நினைப்பு”….
”எழில்ஏழு வண்ணம் , பொழில்வேணு கானம் ,
தொழில்காதல் , தாமரைத் தொப்புள் -சுழியில்
உலகெலாம் உண்டு அலைகடல் நீந்தும்
அலகிலாக் கண்ணன் அழகு”….கிரேசி மோகன்….

