மீ.விசுவநாதன்

இரவா பகலா இறைவோய்நீ ! இரண்டு மான பொருளோநீ !
இரவாப் புகழின் எழிலோநீ ! இருந்தும் இல்லா உருவோநீ !
அரவாய் அமுதாய் கலப்போநீ ! அழகுக் கவிதை நெருப்போநீ !
வரவாய் எனக்குள் உறவோநீ ! வசவில் லாத துறவோநீ (4)

சுகமாய் வலியாய் இருந்தேநீ சுழலும் விதியாய் வருவாய்நீ !
நகமும் சதையு மானாய்நீ ! நரனில் முக்தி மானாய்நீ
அகமும் புறமும் ஒளிர்ந்தாய்நீ ! அசுர சுரனின் குணத்தில்நீ
நிகரே இல்லா பலவான்நீ ! சிவனே தமிழ்நற் கவியேநீ ! (8)

(அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, மா, காய்)

(29.06.2015)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.