கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,
நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க
பாவம் தனில்மூழ்கி, பார்க்கும் இடத்திலெல்லாம்,
நீவந்து நீலமாய் நில்!
இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து,
பொல்லா தவனென்ற பேர்வாங்கி – நில்லாது,
விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது,
விட்ட(ல்)இருள் வண்ணன்தாள் வீழ்!
அக்கரைப் பச்சை அணுகா தவர்களுக்கு
அக்கறை காட்டிட ஆயர்க்காய் – இக்கரை
ஆறெமுனா தீரம் அடைந்தவன், கம்சனுக்கு,
நேரெதிரி யாய்வந்த நட்பு!
(அவுணன் – ராக்ஷசன்)