-பத்மநாபபுரம் அரவிந்தன்
தோழியோடு கையில்
கவண் கல் கொண்டு
தலைவி வந்தாள்
தினைப்புனம் காவல் காக்க…
குருவிகள் விரட்டப்
பரண் மேலேறிப்
பார்த்துப் பார்த்துச்
சலித்துப் போனவள்
செல்ஃ போன் எடுத்துத்
தந்தைக்குச் சொன்னாள்
”அப்பா… ஒரு குருவியைக் கூட
காணும்” என்று!

Leave a Reply