நவராத்திரி நாயகியர்  (5) காஞ்சி காமாட்சி

0

க. பாலசுப்பிரமணியன்

kamakshi

கண்ணுக்கு இனியவளே

கருத்துக்குக்  கனிந்தவளே

கலையனைத்தும் சிலையாகக்

காஞ்சியில் அமர்ந்தவளே !

 

காஞ்சிப் பட்டழகு ,

கண்ணிரண்டும் உனக்கழகு !

கையருகில் கரும்பழகு ,

காமாட்சி உன் அருளழகு !

 

பிறையுண்டு தலைதன்னில்

பரிவுண்டு கண்ணிரண்டில்

பயம் நீக்கும் அபயம் முன்னில்

பார்த்தாலே விலகும் பாவம் மண்ணில் !

 

வேதத்தை வித்தாக்கி

வேட்கையை முடிவாக்கி

முக்தியை  முதலாக்கி

பக்தியைத் தந்தவளே! !

 

பத்மாசனத்தில் உனைக்கண்டால்

பாழ்வினைகள் ஓடிவிடும் !

பார்வதியே, பகவதியே

பாசாங்குசம் தரித்தவளே !

 

சொத்தெல்லாம் எனக்கெதற்கு?

சொந்தமாய் நீயிருக்க !

சுமையில்லா  வாழ்விற்குச்

சுவையான அருட்சுனையே !

 

சக்திபீடம்  உனதன்றோ !

சாந்தத்தின் உருவமே நீயன்றோ !

நவரசத்தில் கருணையின் வடிவன்றோ !

நவராத்திரி நாயகி நீயன்றோ !!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *