க.பாலசுப்பிரமணியன்

arupadai

வேலழகா!  உந்தன் விழியழகா ?

கோலழகா?  உந்தன் கொடியழகா ?

பேரழகா! உந்தன் பெயரழகா ?

சொல்லழகா!  சொல்லின் சுவையழகா?

 

 

பாலழகா? பன்னீர் மணமழகா?

பஞ்சாமிர்த சுவையழகா ?

பூவழகா!! கொன்றைப்பூவழகா !!

பூசிய நெற்றித் திருநீரழகா !

 

 

போரழகா? போரில் கொண்ட சினமழகா?

சினமழிந்து நின்ற சோலையழகா ?

அலையழகா! செந்துரக்கடலுறை அழகா !!

மலையழகா? மலை நின்ற நிலையழகா??

 

 

அன்னை தந்த சக்தி வேலழகா?

அப்பனுக்கு நீ சொன்ன பொருளழகா?

அவ்வையிடம் கேட்ட பாட்டழகா??

அடியார்தம் கொண்ட அன்பழகா?

 

 

முத்தமிழழகா! மூவிரண்டு முகமழகா?

முன்வினை தீர்க்கும் அருளழகா ?

முக்காலும் உந்தன் நினைவழகா?

முருகாவென்று உருகும் மனமழகா?

 

 

சொல்லழகா,  பேரழகா!!

வேலழகா, உந்தன் விழியழகா??

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *