-கவிஜி 

புத்தனிடம் பேச
எதுவுமில்லாத யசோதரையிடம்
பேச நிறைய இருக்கிறது…!

***

உலகின் முதல் கதையும்
கடைசிக் கதையும்
‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…!

***

கைகளை எவ்வளவு
அகலமாக விரிக்க
முடிகிறதோ
அவ்வளவுதான் வானம்
குழந்தைக்கு…!

***

பூவைச் சூடிக்
கொண்ட தோட்டம் என
உன் கல்லறை…!

***

உங்கள் வீட்டுப்
பூனைகளிடம்
கேட்டுவிடாத கேள்விகளில்
எங்கள்வீட்டு அடுப்பு கடைசியாய்
எரிகிறது…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *