பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
புகழுக் காகச் சிலர் இவ்வுலகில்; ஏங்குவர் சிலர்
போதகரின் சொர்க்கபுரி வரவேண்டு மென்று;
பணத்தைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,
தூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்.
13. Some for the Glories of This World; and some
Sigh for the Prophet’s Paradise to come;
Ah, take the Cash, and let the Promise go,
Nor heed the rumble of a distant Drum!
மடமை அல்லவா ! சிலந்தி போல் பின்னி
நிகழ்கால வாழ்வு நூலறுத்து வெல்வதா,
நாமிழுக்கும் காற்றை நாமே வெளி யேற்றி
நமக்கே மூச்சு விடத் தெரியாத போது!
14. Were it not Folly, Spider-like to spin
The Thread of present Life away to win —
What? for ourselves, who know not if we shall
Breathe out the very Breath we now breathe in!
நமது புகழ்பரப்பும் நறுமணப் பூவை நோக்கு;
நவிலும் அது நகைத்து,“தரணிக்குள் வீசுவேன்;
பட்டுக் குஞ்சப் பணப்பை கிழியும் எனக் குடனே,
கொட்டும் பணக் களஞ்சியம் தோட்டத் திடலில்.”
15. Look to the Rose that blows about us — “Lo,
Laughing,” she says, “into the World I blow:
At once the silken Tassel of my Purse
Tear, and its Treasure on the Garden throw.”
+++++++++++++++++++
தகவல்:
2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm
- https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam[November 17, 2015]


Leave a Reply