ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 39

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

“நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் கண்டது போலிருக்கிறாய் நீ. நேற்று நாம் வாழ்ந்தோம். இன்று நாம் வசிக்கிறோம். இதுவே தெய்வத்தின் நியதி. வானரங்களின் வாரிசுகளே ! உங்கள் உறுதி வாக்கு என்ன ?”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________

விடுதலைத் தாகம்
___________________

மனித இதயம் தவித்துக்
கூக்குர லிடும் உதவி நாடி !
மனித ஆத்மா தினமும்
மன்றாடும்
விடுதலைக்குப் போராடி !
ஆயினும்
புரிந்து கொள்வ தில்லை !
கவனிப்ப தில்லை
செவி சாய்ப்ப தில்லை
அவலக் குரலுக் கெல்லாம் !
புறக்கணிப்போம்
புரிந்து கொள் வோனைப்
பைத்தியம் என்று !
விரைந் தோடுவோம்
அவனை விட்டு !
___________________

இரவுகள் கழிகின்றன !
இப்படி நாம் வாழ்கிறோம்
அறியா மையில் !
அடுத்தெடுத்துப்
பகற் பொழுதுகள் புலர்ந்து
அணைத்துக் கொள்ளும்
வரவேற்று நம்மை !
ஆயினும்
இரவுக்கும் பகலுக்கும்
அஞ்சி அஞ்சித் தவிப்போம்
நிரந்தரமாய் !
___________________

இணைந்து கொண்டோம்
இந்தப் புவியோடு
இறைவனின் இதய வாசல்
திறந்துள்ள போது !
மிதிப்போம் காலால் நமது
வாழ்க்கை உணவை
வயிற்றுப் பசி நம்மை
வாட்டும் போது !
எப்படி இனிக்கிறது இவ்வாழ்வு !
ஆயினும் வாழ்வுக்கு
அப்பால் ஒதுங்குவான்
அற்ப மனிதன் !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *