மகாகவி பிறந்த நாள்!

– சுரேஜமீ

கம்பனும்
வள்ளுவனும்                                                   barathiyar
இளங்கோவும்
கலந்து பேசி
தமிழ்த் தாயின்
முன்தோன்றி
ஒரு வரம் 
வேண்டினர்!

தூங்கும் 
தமிழினத்தை 
துயிலெழுப்ப,
தூரிகையைத்
தட்டி எடு என்று!

தானே கருவாகி
தரணியில்
அவதரித்தாள்;
பாரதி எனும்
உருவெடுத்தாள்;
தமிழென்னும்
அமுது படைத்தாள்;
குயில்கூடத் தமிழ்
பாடியது,
அவன் குரல் கேட்டு!
மரம், செடி, கொடிகளெல்லாம்
இசை பாடியது
அவன் தமிழ் “பா” க்கு!
தமிழன் தலை 
நிமிர்ந்தான்!
தரணியில் இனி 
எவர்க்கும் யாம் 
அடிமை இல்லையென்று!

அந்நாள் இந்நாள்!
அவதாரத் திருநாள்!

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!    

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *