ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 44

0

சி. ஜெயபாரதன்.

 

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”
– கலில் கிப்ரான் (Decayed Teeth)
___________________

திருமணம்
___________________

திருமணம் என்பது
தங்கத்தில் வடித்த சங்கிலித்
தோரணம் !
ஆரம்பம் அதற்குக்
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !
மாசற்ற வானி லிருந்து
காய்கள் பழுத்திடப் பெய்திடும்
தூய மழைப் பொழிவு !
தெய்வீக இயற்கை நிலங்கள்
ஆசிகள் பெறும் !
___________________

ஏனெனில் கண்மணியின்
மான் விழிகள்
ஏவிடும்
கடைக்கண் பாய்ச்சல்
வாலிபன்
இதயத்தில் இடப்படும் விதை !
இள நங்கையர் இடும்
உதடுகளின்
முதல் முத்தங்கள்
வாழ்க்கை மரக் கிளையில்
பூக்கும் மலர்கள் !
திருமணத்தில்
இரு மனங்கள் கூடி
உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
முதல் விதையில் விளைந்த
முதற்கனி !
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *