கிரேசி மோகன்

images

”புதியன ஏற்று பழையன போற்றி
கதிரை குணதிசை காண்போம் -மதிநிறை
திங்கட் தவம்முடிந்து தைப்பலன் தந்தது
பொங்கலோ பொங்கலெனப் பாடு’’….

”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது
இத்தரை வாழ்வின் இயல்பது -இத்தையில்
அத்தைதன் மீசைக்கும் ஆச்சரியம் கொள்ளாதே
சித்தத்தின் பொங்கல் சழுக்கு’’(குற்றம்)….

”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்
பொங்கலை வைத்துப் பணிகின்றோம் -எங்களுள்
பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு
சங்கராந்தி சூர்யா சரண்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *