மீ.விசுவநாதன்

“ஆசிரியரே…வாரும் பாலத்துல நடுசெண்டர்ல ஒக்காந்து பேசுவோம்..காத்து நல்லா வீசுதில்லா…”
“அது என்னவே நடுசென்டறு….நம்மூரு கேட்டுவாசல் தெருமாரில்லாருக்கு ஒம்மோடு பேச்சு…..”
“ஆசிரியரே…நீங்க மெட்ராசுக்குப் போனாலும் போனீய..எங்களுக்கு இங்க ஊர் நடப்பச் சொல்ல ஆளே இல்லபோம்…மெட்ராசுல என்ன சமாசாரம்,,,எதாவது உப்பு புளி தேறுமா”
“மெட்ராசுல புத்தகக் காட்சிக்குப் போனேன்…ஒரு நாலு புத்தகம் வாங்கினேன்…அதுலயே முங்கிட்டேன் போம்”

“எங்களப்போல திண்ணை தேய்க்கரவரா நீரு…படிப்பாளியாச்சே….என்ன புத்தகம் வாங்கியாந்தீரு…நமக்கு எதாவது அதுல தீனி உண்டா?”

“நீதிபதி சந்துரு எழுதின ” அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”, ” நீதிபதி சந்துரு” (நேர்காணல்கள்), கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள், கோபல்லபுர மக்கள், அசோகமித்திரனின் “காந்தி” சிறுகதைத் தொகுப்பு” எல்லாம் வாங்கியாந்தேன்…கி.ரா.வுக்கு வந்த கடிதங்கள் புத்தகத்துல வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி, நா.பா.,தீப. நடராஜன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் கடிதமெல்லாம் படிச்சிட்டேன்…இன்னும் அதுல படிக்க நிறைய விசயம் இருக்குவே…”

“அப்படி என்னதான் எழுதுவாங்க ஆசிரியரே…உங்க வீட்டுல எப்படி என்கவீட்டுல எப்படின்னு எழுதறதுக்கு ஒரு புத்தகமா..”

“என்னவே கூறுகெட்டதனமா பேசுதேறு…ஒரு தரமாது அந்த எழுத்தப் படிச்சு பாருமைய்யா…கு. அழகிரிசாமி எழுத்துலதான் எத்தனை நட்பும், பாசமும் தெரியுது…அவருக்கு எழுத்து ஒண்ணுதான்வே உசிரா இருந்திருக்கு….அதெல்லம் படிச்சீர்னா இப்படி வெட்டிப் பேச்சு பேச மட்டீரு…அவருதுதான் அப்படின்னா வண்ணதாசன், வண்ணநிலவன் கடிதத்துல கதையேலாவே இருக்கு..வண்ணநிலவன் எழுத ஆரம்பிச்சது, திடீர்னு கல்யாணம் கட்டிக்கிட்டது…துள்ளக் பத்திரிக்கைல சேர்ந்தது, விட்டது, சினிமாவுக்கு வந்து போனதுன்னு எல்லாத்தையும் இலக்கியமால்லவே எழுதிருக்காரு…எல்லாரோடு கடித்துலயும் ஒரு பசை இருக்குவே…அதான் ஊர்ப்பாசம்….”

“ஆசிரியருக்கு இல்லாத ஊர்ப்பாசமா…அவங்களுக்கெலாம் வரப்போவுது..”

“.குறுக்க சால் பாச்சாதவே…முழுசும் கேளும்..பொறவு பேசும்”

“சரி….நீதிபதி சந்துருன்னு எதோ சொன்னீரே”

“ஆமாம்…”அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”ன்னு ஒரு புத்தகம்…நல்ல தெளிவா எழுதிருக்காருவே…தலித் மக்களுக்கு அவர் சொன்ன தீர்ப்பெல்லாம் கேக்க இப்ப நம்ம பாரதியார் இருந்தார்னா “பலே பண்டியான்னு” நீதிபதி சந்துரு தோள்பட்டைல ஒரு தட்டு தட்டிருப்பாருவே…அந்த புத்தகத்த ரெண்டு மொறை படிச்சுட்டேன்….”

“ஆசிரியரே…ஒங்களுக்குத் தெரியாததா..நம்மூரு தியாகி கோமதி சங்கர தீட்ச்சிதரு, சர்மாஜி எல்லாரும் சேந்துக்கிட்டு எகாம்பரபுரம் தெருவுல வச்சு “தலித்துகளோட சேர்ந்து சமபந்தி போஜனம்” போட்டங்களாமே” அந்தகாலத்துலையே….கோமதி சங்கர தீச்சிதரு எம்.எல்.ஏ. வா இருந்தபோது எத்தனை தலித்து குடும்பத்து புள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாரு…..ஒரு சல்லி காசு வாங்கிருப்பாரா…இப்ப நம ஊரு கவுன்சிலரு கூட கார்லல்லாவே பறக்கானுவ..துட்டடிக்க அலையரானுவளே…”

“சரி…விசயத்தக் கேளும்வே….அந்தப் புத்தகத்தைப் படிச்சுப்புட்டு அதுல உள்ள நியாயத நெனைச்சே மனசு துடிச்சுக்கிட்டிருக்கு…இன்னிக்கு நெலமைல இடஒதுக்கீடுன்னு பார்த்தா நம்ம கிராமத்துலயே எத்தன ஏழை பிராமணப் புள்ளைங்க நல்ல மார்க்கு வாங்கிட்டு மேல படிக்க முடியாம சமையலுக்கும், அப்பளாம் விக்கவும் போகுது…அவ்வளவு வருமானம் இல்லாத அந்தக் குடும்பத்துப் புள்ளைகளும் இந்தக் காலத்துல “தலித்து” தான்வே…இடஒதுக்கீட்டுல நல்லா படிச்சு முன்னுக்கு வந்த கீழ்த்தட்டு மக்களே, தானே முன்னுக்கு வந்து ,” நாங்க மூணு நாலு தலைமுறையா மேல வந்தாச்சு…இனிமே எங்க குடும்பத்துக்கான இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம்…அத இன்னும் தேவையா இருக்கற புள்ளைங்களுக்குக் கொடுங்கன்னு சொல்லற மனசும், காலமும் வரணும்வே…பொறவுதான் இது சுதந்திர நாடு….அன்னிக்கு இருந்த சாதிக் கொடுமை இன்னிக்கு வேற மாறில்லாருக்கு….”

“நல்லகாலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது..சாத்திரம் எல்லாம் மாறப்போகுது…ஓட்டப் பிச்சுக்கிட்டு துட்டு வரப்போகுது”….

“ஆசிரியரே…குடுகுப்பைக்காரன் நம்ம ஊருக்குள்ளல்ல
போறான்…ஓட்டப் பிச்சுக்கிட்டு துட்டு வரப்போகுதுங்கானே…வரப்போற தேர்தலைச் சொல்லுதானோ….”

“அவன் சொன்னதெல்லாம் நடக்கு பாரும்….எல்லாப்பயலும் நல்ல ஏமாத்தக் கத்துக்கிட்டானுங்க..இங்க இருக்கறவன் அங்க போறான் அங்க இருக்கறவன் இங்க வரான்….இவங்கள நம்பி ஓட்டுப் போடக் கூடாதுவே.. ஓட்டப் பிச்சுதான் போடணும்….சரி..மிச்சத்த நாளைக்குப் பாப்போம்….”

“ஆரிசியரே..போறபோது அந்த அம்பிகடைல சூடா ரெண்டு பச்சி தின்னுட்டுப் போவோம்…”
அன்புடன்,
மீ.விசுவநாதன்
03.02.2016 00.15 AM

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *