பிரபஞ்சக் காலவெளி அரங்கம்
படைப்பாளியின்
ஒரு பெரும் நூலகம் !
கடவுள் படிப்படி யாய்த் திட்டமிட்டு
முடங்கும் கருந்துளையே !
தானாய் எதுவும் தவழாது !
வீணாய் இப்பேரண்டம்
தோன்ற வில்லை !
மூல வித்து
ஒன்றி லிருந்து ஒன்று
உருவாகிச் சீராகி வந்துள்ளது !
இல்லாத ஒன்றி லிருந்து,
எதுவும்
எழாது, எழாது, எழாது !
இயக்கும் சக்தி ஒன்று,
இல்லாமல்,
கட்டுப் படுத்தாமல்,
திட்டமிடப் படாமல்
எதுவும்
கட்டப்பட வில்லை !
பிரபஞ்சப் படைப் பனைத்தும்
காரண-விளைவு
நியதியில்
சீரொழுங்கு இயக்கத்தில்
நேரான மீளும் நிகழ்ச்சியில்
வேராய்த் தொடர்பவை
விழுது, கிளை விட்டு !
தாறு மாறாகத்
தாரணி உருவாக வில்லை !
தேனெடுக்கும் தேனீக்கள்,
அணி வகுக்கும் எறும்புகள்,
கூடு கட்டும் தூக்கணாம் குருவி,
ஈக்கள், ஈசல்கள்,
காக்கை, கழுகு, பேசுங் கிளி
நீந்தும் மீனினம்,
ஊர்ந்திடும் இலைப்புழு,
புழு மாறிப்
பறக்கும் பட்டாம் பூச்சி,
மரங்கள், காய் கனிகள்,
மனிதம், விலங்கினம் யாவும்,
உயிரியல்
கணித விஞ்ஞானத்தில்
திட்டமிடப் பட்டுத் தோன்றியவை.
காலவெளி நூலகத்தில்
கடவுள் படைத்திட்ட
மனிதப் பிறவியே
உன்னத
ஓர் மணி யந்திரம் !
++++++++++++++++++a


Leave a Reply