கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

ab8ee64e-c025-4675-8513-13119a015795

கண்ணனின் பச்சைக் காலை கிளி என்று எண்ணி வேடன்
‘’ஜரா’’ விட்ட நச்சு தடவிய அம்பு தைக்க….கிருஷ்ணாவதாரம் முடிவு….
கண்ணனின் காலில் காலன் இருப்பதை அறிந்து கொண்ட
ஐந்தறிவு ஆயர்பாடி பசு, அதனால்தான் கண்ணன் காலை
வருடி ஆபத்து வரும் முன் அறிவித்ததோ….!

”வைகுண்டம் ஏள விரைந்தான், ஜராநச்சுப்
பைகொண்ட அம்பால் பயணமிது, -அய்!கண்டு(ஆச்சரிய விளிச்சொல்)
கொண்டதோ கேசவ்கை கன்றன்றே!, கால்வருடி
விண்டதோவா யில்லாஜீ வன்!’’….கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *