எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் அறிவியல் ஆய்வக களப்பயணம்

0

தேவகோட்டைதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள்கல்லூரி ஆய்வகங்களுக்கு அறிவியல் ஆய்வகக் களப்பயணம் மேற்கொண்டனர். இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும்மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப்பயணம்மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் களப்பயணமாக தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கல்லூரி முதல்வர் பேச்சு:
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பட்சிராஜன் வரவேற்றார். பள்ளி தலைமைஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கி பேசுகையில், 8ஆம் வகுப்பு படிக்கும் நீங்கள் எந்த விசயத்தை அணுகினாலும் ஏன் என்று கேள்வி கேட்டு பதில் பெறுங்கள்.அப்போதுதான் உங்கள் அறிவு விரிவடையும் என்றார். சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டகேள்வி வந்ததே முதல் அறிவியல் கேள்வி என்று கூறினார். ஐசக் நியூட்டன் போன்ற அறிவியலாளர்கள் அறிவியல்தொடர்பான நிறையக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்குக் காரணமே அவர்கள் ஏன் என்று கேள்வி கேட்டதனால்தான்என்றார். எனவே நீங்களும் சிறு வயதில் படிக்கும் காலத்திலேயே நிறையக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறுங்கள்.வருங்காலத்தில் கண்டிப்பாக அறிவியல் விஞ்ஞானிகள் ஆவீர்கள் எனப் பேசினார்.

விலங்கியல் துறையைப் பார்வையிடல்:

devakootai1

மாணவர்கள் விலங்கியல் ஆய்வகத்தில் மனித எலும்புக் கூட்டை ஆர்வமாகப் பார்வையிட்டனர்

களப்பயணத்தின் தொடக்கமாக மாணவ மாணவியர் விலங்கியல் துறையில், ஒரு செல் உயிரிகளிலிருந்து பல செல்உயிரிகள் வரையும்;
முதுகெலும்பற்றவையான புரோட்டோசோவா தொகுதியைச் சார்ந்த அமீபா, பாரமீசியம், பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள், ஆர்த்ரோபோடா, ஆக்டோபஸ், ஸ்டார் ஃபிஷ், சங்கு, சிப்பி, இறால், நத்தை ஆகியவற்றையும்;
முதுகெலும்பு உள்ளவற்றில் கடல் குதிரை, பச்சோந்தி, பல்லி , ஆமை, மீன் வகைகள்; இருபுலவாழ்விகளான தவளை;
ஊர்வனவற்றில் பாம்பு வகைகளான நச்சுப் பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள், நல்லபாம்பு, ராஜநாகம், பச்சைப்பாம்பு;
பறப்பனவற்றில் புறா, காகம், மைனா, மரங்கொத்தி, மீன் கொத்தி ஆகியவை.
உடல் உறுப்புகளில் எலும்புகளுடனும், கருக்களில் பாலூட்டிகளான முயல், பன்றி, எலி ஆகியவற்றின் கருக்களையும்;எலும்பு வகைகள், மனித இதய மாதிரி, டி என் ஏ, ஆர் என் ஏ மாதிரிகளையும், மைட்டோகாண்ட்ரியா, மனித எலும்புமண்டலம் தொடர்பான மாதிரிகளையும், கரு உருவாவதை நுண்ணோக்கி வழியாகவும் பார்த்தும் அதன் பயன்களைகேட்டும் அறிந்து கொண்டனர்.ரத்த வகை கண்டறிதல் எவ்வாறு நடைபெறுகிறது, அதன் அர்த்தங்கள் என்ன,அதன்வகைகள் என்ன என்பன போன்ற தகவல்கள் பெற்றனர்.

தாவரவியல் துறை பார்வையிடல்:
தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள், பிரையொ பைட்டுகள் எனத் தாவரங்களின்வகைகளையும், நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை, சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன்பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.

மூலிகைத்தோட்டம் பார்வையிடல்:

devakootai4

மாணவர்கள் தாவரவியல் தோட்டத்தில் உள்ள மூலிகை செடிகளை ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்

மூலிகை தோட்டம் சென்று மலேசியன் திப்பிலி, அம்மான் பச்சரிசி, சிறுநங்காய், முடக்கத்தான், முப்பிரண்டை,கரிசலாங்கண்ணி, நொச்சி, வசம்பு , ஓமவல்லி, ஆடாதொடா, தவசி முருங்கை, மஞ்சள், மணத்தக்காளி, பெரியநெல்லி,தும்பை, அறுகம்புல், சங்குப்பூ, செம்பருத்தி, குப்பைமேனி உட்பட பல்வேறு மூலிகை செடிகளை நேரடியாகப் பார்த்தும்அதன் பயன்களை அறிந்தும், அது எவ்வாறு மனிதர்களுக்கு உதவியாக உள்ளது என்பதையும் அறிந்தார்கள். .தாவரவியல்விஞ்ஞானிகளைப் படங்களின் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டும் பயன்பெற்றனர்.

வேதியியல் ஆய்வகம் பார்வையிடல்:
வேதியியல் ஆய்வகத்தில் உப்பு தொடர்பான சுடர் சோதனைகள், பருமனரி பகுப்பாய்வு செய்து காட்டல், ஆய்வகஉபகரணங்களான கூம்பு குடுவை, பியூரெட், பீப்பெட், சோதனைக் குழாய், கண்ணாடித் தட்டு, உப்பு எடுக்கும் கரண்டி,கண்ணாடி கலக்கி, புன்சென் அடுப்பு , நிற மாற்றத்தைச் சரியாக காட்டும் போர்சலின்ன் டைல் , 200 மி.லி.பீக்கர்,வீழ்படிவு சேகரிக்கும் சோதனைக் குழாய் போன்றவற்றையும், நடுநிலையாக்கல் வினைகளையும், வீழ்படிவு எவ்வாறுநடைபெறுகிறது என்பதையும் அதற்கான உபகரணங்கள் எப்படிச் செயல்படுத்த படுகிறது என்பதையையும்நேரடியாகச் செய்து காட்டல் மூலம் கற்று கொண்டனர்.

devakootai2

மாணவர்கள் வேதியியல் ஆய்வகத்தில் உபகரணங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டனர்

devakootai3
வகுப்பு மாணவர்கள் நடுநிலையாக்கல் சோதனைகளை அவர்களே செய்து பார்த்தனர்

மாணவர்களும் நடுநிலையாக்கல் வினைகளை அவர்களே செய்து பார்த்து அதன் முடிவு நிலைகளைத் தெரிந்துகொண்டனர். மேலும் உப்புக்கள் கண்டறிதல் சோதனைகளை அதன் நிறங்கள் புன்சன் அடுப்பில் காண்பிக்கும்போதுஎவ்வாறு மாறுகிறது என்பதையும், அதன் மூலம் அவற்றை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்பதையும் அவர்களேசெய்து பார்த்தனர்.

இயற்பியல் ஆய்வகம் பார்வையிடல்:
இயற்பியல் துறையில் காந்தங்கள், வான்நோக்கி, மின்நோக்கி,தனிஊசல், நிறப்பிரிகை, ஆடிகள், திருகு அளவி, ஊசல்கடிகாரம், எதிரொலிப்பு மற்றும் நேனோ தொழில் நுட்பங்கள் போன்றவை நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டும்மாணவர்களால் செய்தும் பார்க்கப்பட்டது. கணினித் துறையில் எவ்வாறு கணினியை இயக்குவது, அதில் உள்ள முக்கியபகுதிகள் என அனைத்துக்கும் விரிவாக நேரடியாகச் செயல் விளக்கங்கள் மாணவ,மாணவியர்க்கு விளக்கப்பட்டது.

கல்லூரி நூலகம் பார்வையிடல்:
கல்லூரியின் நூலகத்தை நூலகர் உதவியுடன் மாணவர்கள் பார்வையிட்டனர். எவ்வாறு ஒவ்வொரு புத்தகமும் பாடவாரியாக அடுக்கப் பட்டுள்ளது, அதனை எவ்வாறு நாம் எளிதாக எடுத்துப் படிக்க இயலும், நூலகம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் கல்லூரிநூலகத்தில் அமர்ந்து படித்து பார்த்தனர்.

பள்ளி மாணவியின் பேச்சு:
ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி தனம் பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றிமட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல்துறைகளையும் அறியும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பள்ளியின் சார்பாக மாணவி சுமித்ராநன்றி கூறினார். களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியை வாசுகி மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர்செய்திருந்தனர்.

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *