கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பகவான் உவாச….
——————————————
“சரணா கதிசெய்து சும்மா இருப்பாய்,
கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்;
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள்
நூறை ஒழிக்க நிமிர்”….
“வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய்
கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய்,
சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை,
நெல்லிக் கனியாக்கி னன்”….கிரேசி மோகன்….