கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
முழங்கால் முடிச்சேறி மொட்டையிட்டு மாலை தொழுங்கால் துயரம் தொலையும் -விழுங்கிஆல் தன்னில் மிதந்த தவசுப்ர பாதனவன் முன்னில் அவிழும் முடிச்சு….
ஹரிச் சுவடி
—————-
அந்தரி அண்ணா கோவிந்தா
ஆவுடை அப்பா கோவிந்தா
இந்திர லோகம் கோவிந்தா
ஈ கொசு எனக்கு கோவிந்தா
உந்தன் மலையில் கோவிந்தா
ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
எந்த நாளுமே கோவிந்தா
ஏகாந்த சேவை கோவிந்தா
ஐந்து பொறிகட்கு கோவிந்தா
ஐயமிட்டிடு கோவிந்தா
ஒன்றி உரைப்போம் கோவிந்தா
ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….

