கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“ஆதி சங்கரர் ‘’ஆத்ம போதத்தில்’’ ஞானியை(ஆத்மா) ராமனாகச் சொல்லும்போது ‘’சாந்தியே சீதை’’ என்று வர்ணிக்கிறார்’’(சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….
‘’தீர்த்வா மோஆர்ணவம் ஹத்வா
ராகத் வேஷாதி ரஷசான்!
யோகீ சாந்தி ஸமாயுக்தோ
ஹ்யாத்மா ராமோ விராஜதே !!
இதை வாசித்துப் பிறந்தது இன்றைய வெண்பா….
பசு, கண்ணன் ‘’ஞானி’’ பாதம் வருட ‘’சாந்தி’’ பிறக்கும்….
சாந்தி கூடினால் ‘’ஞானி’’….
சாந்தி கழிந்தால் ‘’மேனி’’….
‘’சாந்தி’’ ‘’ஞானத்தின்’’ சகா….
ராமனுக்கு ‘’சாந்தி’’ சீதை கைகூடினால்….
கண்ணனுக்கு ‘’சாந்தி’’ கறவை கால்கூடினால்….!
’’என்ன என்ன எண்ணங்களோ
கண்ணன் வரும் வேளையிலே
வண்ண வண்ண கேசவ் விரல்
வடிக்குது வெண்பாக்களாய்’’….!
‘’ஆதியில் சாந்தி, அதன்முடிவி லும்சாந்தி,
பாதியில் சாந்தி, பதம்வருடும் -போதிலும்
சாந்தி, பதமளிக்கும் ஸ்ரீகிருஷ்ண மூர்த்திஞானி:
சாந்திக்கு ஞானம் சகா’….
சாந்திக்கு ஞானம்க ஸின்’’…..கிரேசி மோகன்….
—————————————————————————————————————