‘’கண்ணா கனியவை நாற்பது’’(அந்தாதி தொடர்ச்சி)

0

 

“பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்

வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
மரணத்தில் தானே முடிவு’’….(7)

’’முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
தர்கத்தைத் தாண்டல் தவம்’’….(8)

’’தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
சந்திக்க முந்துவான் சம்பு’’….(9)

’’சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
ஈசனிடம் சாத்தான் இயல்பு’’….(10)

’’இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்’’….(11)

’’சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
விடியாத நெஞ்சை விலக்கு’’….(12)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *