இரா.முருகனுக்கும் அடியேனுக்கும் ‘’வெண்பாஷணை’’…..
அடியேனுக்கு பல் வலி வந்த போது…. (1)
———————————-
மல்லாண்ட மாயவா வில்லாண்ட வித்தகா
சொல்லாண்ட வாயிலே சொத்தையாய் -பல்லாண்டு
பாடாய்ப் படுத்துது ஆடா(து) அசங்காது
வாடா மருப்பொசித்த வா….()….15-12-2009….கிரேசி மோகன்….
இரா.முருகன் பதில் வெண்பா….
—————————————-
பல்லவன் எந்நாளும் நாக்கைக் கடிக்காத
நல்லவன் ஆயினும் ஐம்பதில் -தொல்லையாய்
ஆடி அசைந்தவஸ்தை தந்தானை நேற்றுவே
றோடு களைந்தாயோ சொல்….()….16-12-2009….கிரேசி மோகன்….
அடியேன் பதில் வெண்பா….
————————————————
பல்லெடுத்தால் வாய்வீங்கி பார்க்க சிரஞ்சீவி
கல்லெடுத்தோன் ஆவேனாம் காட்சிக்கு -சொல்லுரைத்து
நாடகம் இல்லாத நாளில்வா என்றான்பல்
ஆடும்GUM வைத்தியன் ஆய்ந்து….()….16-12-2009….கிரேசி மோகன்….
இரா.முருகன் அனுப்பிய கணினி சிஸ்டக்-கவசம் படித்து விட்டு….(மீண்டும் அனுப்புங்கள் ‘’சிஸ்டக்-கவசத்தை’’….சிஸ்டத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது இரா.மு. சார் ப்ளீஸ்….)
————————————————————————————- (2)
MUSTடாய் முருகனின் SYSTEK கவசத்தை
DESK-TOPப்பில் வைத்த தினமுதல் -BESTடாய்
கணினி இயங்குது கன்னியைப் போலே
இனியெனக்(கு) என்றும் இரவு….கிரேசி மோகன்
————————————————————————————————-
உப்புமா wins 1st PRIZE 10000 DOLLARS IN GLOBAL CHEF CONTEST
இதற்கு இரா,முருகன் எழுதிய வெண்பா….
—————————————————————————————————–
தள்ளிப்போ என்றாலும் துள்ளிவரும் தட்டின்றி
அள்ளியுண்ண வாயில் பசையாய் -பள்ளிகொள்ளும்
அப்புறமும் கிச்சடியாய் வேடமிடும் கண்றாவி
உப்புமாவுக்(கு) உண்டோ இணை….(இரா.முருகன்)….22-06-2011
இரா.முருகனின் உப்புமா வெண்பாவுக்கு எனது பதில் வெண்பா….
———————————————————————————-
சப்புமா நாக்கில் SALAIVA சுரந்திட
எப்பம்மா! என்றுநாம் ஏங்கிட -உப்புமா
ஒன்றே நமக்கு உடனடியாய் வாய்த்திடும்
தின்றே மகிழ்வாய் தினம்….(கிரேசி மோகன்)….22-06-2011
நடேசன் பார்க்கில் வீற்றிருக்கும் கணபதியை
இரா.முருகன் பாடிய வெண்பா….
———————————————————
பூங்கா கணபதி பூசாரி எங்கேபார்
ஓங்காரம் சொன்னபடி ஓரமாய் -சாய்ங்காலம்
தும்பிக்கை சாமியை நம்பிடும் பக்தனுக்கு
கம்பிக்குள் தீபம் நுழைத்து….(இரா.முருகன்)….30-06-2011
பூங்கா கணபதி மீது அடியேன் எழுதியது….
——————————————————
தம்பிக்குக் காதல் துணைபோன தந்திக்கு
கம்பிக்குள் கற்பூரம் காட்டினாலும் -நம்பிக்கை
கோர்க்கும் அடியார்க்கு கோரியன தந்திடுவார்
PARKகில் கணபதி பார்….(கிரேசி மோகன்)….30-06-2011
நடேசனார் பூங்கா நடேசன்தன் SONனை
விடாது வலமாய் வருவோர் -அடாசு
SUGAR-BP அண்டாது சவுக்கியமாய் வாழ்வார்
நுகர்பூக்கள் வாசம் நிகர்த்து….(கிரேசி மோகன்)….30-06-2011