”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
“மாலை மயக்கம், மதிய உதயம்அதி
காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
எரிபவை கூட எழில்”…..
‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
வீற்றவளே பாலா , வருக வருகநான்
சாற்றும்வெண் பாவை சகித்து’’….கிரேசி மோகன்
”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
அதியற் புதமான ஆன்ம உலகில்:
துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….

